நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்

நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்

நீயும் கற்கலாம் தமிழை என்று கலியன் சவுரி ராஜப் பெருமாளை அழைக்கிறார்.

கலியன் என்பது திருமங்கை ஆழ்வாரின் பெயராகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணபுர‌த்தில் உள்ள சவுரி ராஜப் பெருமாளை நீயும் கற்கலாம் தமிழை என்று அழைக்கிறார்.

Continue reading “நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்”

இணைய இதழ்கள் – ஓர் அறிமுகம் – பாரதிசந்திரன்

இணைய இதழ்கள் தமிழில் நிறைய உள்ளன. ஆனாலும் அவை நிறையப் பேருக்குத் தெரியாமல் உள்ளன. நாம் ஒவ்வொருவரும் ஐந்து அல்லது ஆறு இணைய இதழ்கள் பற்றி அறிந்து வைத்திருந்தாலே அதிகம்தான். நம்மைப் போன்றவர்களுக்கு, தமிழில் உள்ள இணைய இதழ்கள் பற்றி ஒரு நல்ல‌ அறிமுகம் கொடுக்கிறார் பாரதிசந்திரன்.

பாரதிசந்திரன் என்று இலக்கிய உலகில் புகழ் பெற்ற முனைவர் செ சு நா சந்திரசேகரன், இனிது இதழில் இணையம் அறிவோமா? என்ற தலைப்பில் வாரம் ஒரு தமிழ் இணைய இதழ் பற்றி எழுதிய தொடரின் கட்டுரைகள் இவை.

Continue reading “இணைய இதழ்கள் – ஓர் அறிமுகம் – பாரதிசந்திரன்”

மகாபாரதப் போருக்கு யார் காரணம்? – யோசித்துப் பாருங்கள்

மகாபாரதப் போருக்கு யார் காரணம்

மகாபாரதப் போருக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில், மகாபாரதம் படித்த அல்லது கேட்ட அல்லது பார்த்த‌ அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நமது பதிலை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார். அதற்காக மகாபாரதத்தில் சகாதேவனுக்கும் கண்ணனுக்கும் இடையே நடந்த உரையாடலை முன்வைக்கிறார்.

Continue reading “மகாபாரதப் போருக்கு யார் காரணம்? – யோசித்துப் பாருங்கள்”

தெய்வத் தமிழ்

தெய்வத் தமிழ்

தொன்மை வாய்ந்த நம் பாரத நாட்டில் சிறந்த கலாசாரத்தோடும் பண்பாட்டுடனும், வாழ்வியல் முறையில் தனித்துவம் பெற்றதாகவும், மற்றவர்க்கு எடுத்துக்காட்டாகவும் தமிழ் பேசும் நல்லுலகம் விளங்கியது.

சமயக் கருத்துகளும் தத்துவ விளக்கங்களும் சிறந்து விளங்கின. ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் அனைவரும் இருந்தது நம் பகுதியில்தான். பதினெண் சித்தர்கள் இருந்ததும் இங்குதான்.

சங்கரர், இராமாநுஜர் மற்றும் மத்வர் ஆகிய மூன்று முதன்மையான தத்துவப் பெரியோர்கள் தோன்றியதும் இங்குத்தான். 108 வைணவத் திவ்ய தேசங்களில் பெரும்பாலான திருத்தலங்கள் தென்னகத்தில்தான் இருக்கின்றன.

சைவத் திருத்தலங்களில் பெரும்பான்மையான திருத்தலங்கள் இங்குதான் உள்ளன. முருகனின் ஆறுபடைவீடுகளும் இங்குதான் உள்ளன. திகம்பர சமணக் கோயில்களும் அநேகம் இங்கு உள்ளன.

Continue reading “தெய்வத் தமிழ்”

நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் என்ற‌ நூல் திரு.சி. இராமமூர்த்தி இராமாநுஜதாசன் அவர்களால் மே மாதம்-2021 ல் வெளியிடப்பட்ட அற்புதமான நூல் ஆகும்.

அற்புதமான ஆழ்வாரான நம்மாழ்வாரின் இலக்கிய நயங்களையும், வைணவச் சமயம் சார்ந்த இறையாண்மைக் கருத்துக்களையும் பன்னூல் புலமையோடு ஒப்பிட்டும், உவமித்தும் எழுதப்பட்டது இந்நூல்.

ஆன்மீகம் ஒரு மாபெரும் பிரமாண்டம். அதை இன்னும் யாரும் முழுதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதில் நுழைவதற்கான பல வழிகளில் இந்த நூலும் ஒன்று எனலாம்.

Continue reading “நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை”