தொன்மை வாய்ந்த நம் பாரத நாட்டில் சிறந்த கலாசாரத்தோடும் பண்பாட்டுடனும், வாழ்வியல் முறையில் தனித்துவம் பெற்றதாகவும், மற்றவர்க்கு எடுத்துக்காட்டாகவும் தமிழ் பேசும் நல்லுலகம் விளங்கியது.
சமயக் கருத்துகளும் தத்துவ விளக்கங்களும் சிறந்து விளங்கின. ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் அனைவரும் இருந்தது நம் பகுதியில்தான். பதினெண் சித்தர்கள் இருந்ததும் இங்குதான்.
சங்கரர், இராமாநுஜர் மற்றும் மத்வர் ஆகிய மூன்று முதன்மையான தத்துவப் பெரியோர்கள் தோன்றியதும் இங்குத்தான். 108 வைணவத் திவ்ய தேசங்களில் பெரும்பாலான திருத்தலங்கள் தென்னகத்தில்தான் இருக்கின்றன.
சைவத் திருத்தலங்களில் பெரும்பான்மையான திருத்தலங்கள் இங்குதான் உள்ளன. முருகனின் ஆறுபடைவீடுகளும் இங்குதான் உள்ளன. திகம்பர சமணக் கோயில்களும் அநேகம் இங்கு உள்ளன.
Continue reading “தெய்வத் தமிழ்”