மக்களின் மதிப்பை இழந்தவர் இனியும்
மாண்புடன் இருப்பதுவோ?
குக்கலை விரட்டி அடிப்பதை போலக்
கூனரை விரட்டிடவே
முக்கிய அறிஞர் யாவரும் வெளியில்
வருவதும் வேண்டுமன்றோ
மக்கிய மயிரைப் பிடுங்கியே எறிய
மாத்திறம் வேண்டுவதோ?
சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். இந்நூல் ஆசிரியர் இளங்கோவடிகள். இவர், தமிழ்த்தாயைக் காப்பிய மாளிகையில் வைத்து அழகு சேர்த்தவர்.
Continue reading “சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜதாசன்”உயிர் வீணே! – பேரினப் பாவலன்
மஞ்சுசூழ் மலைவளந் தின்றங் குறைந்த
விஞ்சுபுகழ்த் தொன்குடி வெற்பரை யிழித்துப்
புடவிக் கணியொடு பல்லுயிர் செறித்த
அடவி கொன்றார்ப் பரித்தெ ழுந்து
Continue reading “உயிர் வீணே! – பேரினப் பாவலன்”அறநெறியில் சென்றிடுக – தா.வ.சாரதி
பண்படவே உயர்பெறவே நிலைபெறவே பயின்றிடுவோம்
பண்ணிசைத்து செந்தமிழில் சுவைபடவே பாடிடுவோம்
எண்ணிறைந்த பொருள்களிலும் தமிழ் மொழியை ஏற்றிடுவோம்
அண்டமெல்லாம் தமிழன்னை புகழோங்கச் செய்திடுவோம்
தமிழின் அருமை – தா.வ.சாரதி
தமிழின் அருமை உணர்ந்தவரே
உலகில் சிறந்த உயர்ந்தவரே