எரிமலையாகுமோ அனிச்சம்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காலை மணி ஒன்பதரை.

இரண்டாவது டோஸ் காபிக்காக அடுப்பில் பாலை வைத்துவிட்டு, டபரா டம்ளரை எடுத்து சமையல் மேடையில் வைத்துவிட்டு, ஜீனி டப்பாவை கப்போர்டிலிருந்து எடுக்க முயன்ற சாவித்ரி மாமியின் அறுபத்தைந்து வயது உடல் தடுமாறியது.

தலை சுற்றுவதுபோல் இருந்தது. அழுதழுது ‘தலை’ வலிக்க வேறு செய்தது. எல்லாம் காலையில் கணவர் சாம்பசிவம் அறைந்த அறையாலும் அடித்த அடியாலும் விளைந்தவை.

இருபத்தைந்து வயதில் வாங்க ஆரம்பித்த அறையும் அடியும் இந்த அறுபத்தைந்து வயதிலும் மருமகள், மாப்பிள்ளை வந்தும் பேரன், பேத்திகள் எடுத்தும் இன்னும் நின்றபாடில்லை.

Continue reading “எரிமலையாகுமோ அனிச்சம்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

கடமை – கதை

கடமை - கதை

“என்னடா, சேத்தான் நம்ம பொழப்பு இப்படியே போய்கிட்டு இருக்குது. ஒரு பொழப்பையும் காணும். காலையில எந்திரிச்சு கடை தெரு பக்கம் வந்தா ஒரு பயலும் ஒரு பொழப்பும் தர மாட்டேன்றானுங்க.” என்று கேட்டான் பாபு.

Continue reading “கடமை – கதை”

எங்கேயோ கேட்ட பாடல் – திசை சங்கர்

வாழைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்ற சுப்புவின் வேலையை மேகங்கள் செய்து கொண்டிருந்தன.

மெல்ல விழும் தூறலில் சைக்கிளை வேகமாக ஓட்டியபடி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது லாரி ஒன்று பாடலை ஒலிக்கவிட்டபடி சென்று கொண்டிருந்தது. செல்லும் வேகத்தில் சில வரிகள் மட்டும் காதில் கேட்டன.

Continue reading “எங்கேயோ கேட்ட பாடல் – திசை சங்கர்”

நர்மதா ஒரு நீரோடை – கதை

நர்மதா ஒரு நீரோடை - கதை

மாலை மணி நாலே முக்கால்.

துருப்பிடித்த குழாய்களோடு நைந்துபோன பவானி ஜமுக்காளத்தாலான சிகப்பும் வெள்ளையுமாய் கோடுபோட்ட துணி மாட்டப்பட்டிருந்த ஹைதர்காலத்து ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி செகண்ஹேண்டில் பெரும் பிரயத்தனத்தில் வாங்கிய சின்ன சைஸ் டிவியில் நியூஸ்சேனலில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுராமன்.

“ஏன்னா..நியூஸே பாத்துண்ருக்கேள்.. சங்கரா டிவி மாத்தமாட்டேளா..”

“மணி நாலே முக்கால் தானே ஆறுது நர்மதா.. அஞ்சு மணிக்குதானே லலிதா சகஸ்ரநாமம் சங்கரா டிவில..”

“இல்ல..இல்ல..நாலு அம்பதாறுக்கே ஆரம்பிச்சுடறுது..மணி நாலு அம்பத்தஞ்சு ஆயிடுத்து பாருங்கோ..”

Continue reading “நர்மதா ஒரு நீரோடை – கதை”

பதட்டப் படாதே – சிறுகதை

நள்ளிரவு ஒரு மணி இருக்கும். கரண்ட் கட் ஆனதும் உடல் வேர்வையால் நனைய, தூங்கிக் கொண்டிருந்த பிரதீப் கண் விழித்தான்.

எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு. ‘என்ன இது? எல்லாம் இருட்டாக தெரிகிறது. கண்ணை மூடி இருக்கிறோமா! திறந்து இருக்கிறோமா?’ தன் கண்ணை தன்னாலேயே நம்ப முடியவில்லை. தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

‘கண் திறந்து தான் இருக்கிறது. அப்போ ஏன் பார்க்க முடியவில்லை? என்ன நடக்கிறது இங்கே?’ கண்களை கசக்கி கொண்டவனுக்கு எதிரே ஏதோ அசைவது போல் தோன்றியது.

அதையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்திருக்கவும் பயம். உடம்பெல்லாம் சில்லுற்று போனது. ‘சரக் சரக்’ என்று சத்தம் வேறு.

Continue reading “பதட்டப் படாதே – சிறுகதை”