சொர்க்க வனம் 25 – இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்

இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்

கொக்கு தலைவனும் இருன்டினிடேவும் கனலியின் கூட்டை வந்தடைந்தன. கூட்டில் கனலி இல்லை. ‘எங்க போயிருப்பாரு?’ என்று யோசித்தப்படியே அப்பகுதியை சுற்றி வந்தது கொக்கு தலைவன். இருன்டினிடேவும் ஆவலோடு காத்திருந்தது.

அப்பொழுது அங்கு வந்த அணில், “யார தேடுறீங்க?” என்று கொக்கைப் பார்த்து கேட்டது.

“இங்க கனலிய தேடி வந்தோம், எங்க போயிருக்காருன்னு தெரியுமா?” என்று கொக்கு கேட்டது.

Continue reading “சொர்க்க வனம் 25 – இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்”

சொர்க்க வனம் 24 – வாக்டெய்லை இருன்டினிடே நெருங்கியது

வாக்டெய்லை இருன்டினிடே நெருங்கியது

மறுநாள்.அதிகாலை நேரம்.இன்னமும் விடியவில்லை.மிதமான அளவில் பனி பொழிந்துக் கொண்டிருந்தது.

கனலியின் நண்பனான கொக்கு கூட்டத்தின் தலைவனுக்கு உறக்கம் கலைந்தது. கூட்டில் இருந்து நகர்ந்து மரத்தின் உச்சிக்கிளைக்கு வந்து நின்று கொண்டு, ஆகாயத்தை உற்று நோக்கியது. கருப்பு வானத்தில் ஜொலிக்கும் விண்மீன்கள் விரவிக் கிடந்தன.

குளிர்ந்த சூழலில் இரவு வானத்தை காண்பதிலே அது மகிழ்ச்சி அடைந்தது. அப்பொழுது வாக்டெய்ல் குருவியை அதன் கூட்டத்தோடு சேர்க்க வேண்டும் என்று கனலி சொன்னது அதன் நினைவிற்கு வந்து.

Continue reading “சொர்க்க வனம் 24 – வாக்டெய்லை இருன்டினிடே நெருங்கியது”

சொர்க்க வனம் 23 – ‍வாக்டெய்லின் மகிழ்ச்சி

வாக்டெய்லின் மகிழ்ச்சி

சில நாட்களுக்கு பிறகு,

தனியாக மரக்கிளையில் அமர்ந்து கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருந்தது வாக்டெய்ல்.

அப்பொழுது அங்கு ஆடலரசு வந்தது.

“வாக்டெய்ல், என்ன பண்ற?”

“குறிப்பு எழுதிக்கிட்டு இருகேன் நண்பா”

Continue reading “சொர்க்க வனம் 23 – ‍வாக்டெய்லின் மகிழ்ச்சி”

சொர்க்க வனம் 22 ‍- கனலியின் உபதேசம்

கனலியின் உபதேசம்

அது முற்பகல் நேரம். கூட்டிற்கு திரும்பியது ஆடலரசு. அங்கு வாக்டெய்ல் இல்லை.

அந்த மரத்தின் மற்றொரு பகுதியில் வாக்டெய்ல் நின்றுக் கொண்டிருந்தது. அதனை கண்டு பிடித்தது ஆடலரசு.

ஆடலரசுவை கண்டதும், “என்ன நண்பா, ஏதாச்சும் முக்கியமான செய்தியா?” என்றுக் கேட்டது வாக்டெய்ல்.

Continue reading “சொர்க்க வனம் 22 ‍- கனலியின் உபதேசம்”

சொர்க்க வனம் 21 – ‍வாக்டெய்ல் கண்ட காட்சிகள்

வாக்டெய்ல் கண்ட காட்சிகள்

சில நாட்கள் கடந்தன.

கனலி அதிகாலையிலேயே வந்து வாக்டெய்லின் உடல்நிலையை பரிசோதித்தது. வாக்டெய்லின் இறகுகளில் காயம் ஆறத் துவங்கியிருந்தது. உடலின் மற்ற பாகங்களில் இருந்த காயங்கள் எல்லாம் முழுவதுமாக ஆறியிருந்தன.

அதனால், வாக்டெய்லின் உடல்நிலை சீராகியிருப்பதை கனலி உறுதி செய்துக்கொண்டது.

வாக்டெய்லும் “வலி ஏதும் இல்லை” என்று கூறியது.

“வாக்டெய்ல், உன்னோட உடல்நிலை சீராகி இருக்கு” என்றது கனலி.

Continue reading “சொர்க்க வனம் 21 – ‍வாக்டெய்ல் கண்ட காட்சிகள்”