தேடல் – சிறுகதை

முதுமையில் தனிமை

அவன் அந்த தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தான். அங்கும் இங்கும் பார்த்தபடி அவன் கண்கள் எதையோ தேடியபடி இருந்தது. காலை நேரம் என்பதால் போவோர் வருவோர் எனத் தெருவில் கூட்டம் அதிகம் இருந்தது.

Continue reading “தேடல் – சிறுகதை”

சிரிப்பு – கவிதை

சிரிப்பு

எல்லாவற்றையும்
மறந்து போக செய்யும்
மாயக்காரன் சிரிப்பு!

கழுதையும்
காட்டெருமையும்
இன்னும் சிரிக்க கற்றுக்கொள்ளவில்லை!

கடவுள்,
மனிதனுக்குக் கொடுத்த
மகா உன்னதமான வரம்
சிரிப்பாகும்…

Continue reading “சிரிப்பு – கவிதை”

பெண் போலீஸ் – சிறுகதை

பெண் போலீஸ்

முதலமைச்சர் கோட்டையிலிருந்து பக்கத்து மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சாலை மார்க்கமாக பயணம் செய்யப் போகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றது.

ஏராளமான ஆண், பெண் போலீஸ்காரர்களை சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்துள்ளார்கள். அப்படித்தான் பெண் போலீஸ் திலகவதிக்கும் இன்று டியூட்டி.

போக்குவரத்து நிறைந்த ஒரு சாலையில் அவள் காலை 7 மணியிலிருந்து நின்று கொண்டிருக்கிறாள். முதலமைச்சரின் கான்வாய் தோராயமாக பதினோரு மணி அளவில் கடக்கக் கூடும் என்று சொல்கிறார்கள்.

Continue reading “பெண் போலீஸ் – சிறுகதை”

தமிழா?அமிழ்தா? – கவிதை

தமிழ்

செந்தமிழே! என் தமிழே!
தித்திக்கும் செங்கரும்பை ஒத்தவளே
தேன் சிந்தும் கலையழகு கொண்டவளே

எத்திக்கும் என் நா மணக்கும் மலர்தமிழே
புத்திக்குள் புகுந்தென்னை கவிப்பூவுலகில்
கால்பதிக்க வைத்த வளர்தமிழே

சித்திர செவ்விதழ்கள் பல
சித்தரிக்கும் என் தமிழே
கத்தரி வெயிலிலும் எமை
உறையச் செய்யும் பனித்தமிழே

Continue reading “தமிழா?அமிழ்தா? – கவிதை”