காணாமல் போன நிலா – சிறுகதை

தாமரை நிலவு! அவளுடைய பெயர். நிலா ஒரு பெண்ணாகியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

சிரித்தாலே நிலவு போன்ற அவளது முகம் தாமரையாகச் சிவக்கும். பொருத்தமான பெயரைத்தான் கொண்டிருந்தாள்.

ஆயிரக் கணக்கில் வந்து குவிந்த வரன்களில் அவளுக்காகத் தந்தை சிற்றம்பலம் தேர்ந்தெடுத்தது அரவிந்தன் என்கிற வரனைத்தான்.

Continue reading “காணாமல் போன நிலா – சிறுகதை”

பிப்ரவரி 14 – சிறுகதை

பிப்ரவரி 14 - சிறுகதை

முத்துவேல் ஸ்பிளண்டர் பைக்கினை பெட்டி கடையின் ஓரமாக, தான் வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு தன் புத்தக பையை எடுத்துக்கொண்டு வேக வேகமாக அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.

பஸ் ஸ்டாப் அடைந்ததும் அங்கு நின்றவரிடம்

“சார் 7ஜி பஸ் போயிடுச்சா?” என்று கேட்டான்.

“இன்னும் வரல தம்பி.”

“மணி எட்டரை ஆயிடுச்சு. இன்னும் வரலைங்களா?”

Continue reading “பிப்ரவரி 14 – சிறுகதை”

கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை

இரண்டு நாட்களாகவே ராதாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தான் ரவி.

இனம் புரியாதோர் சோகம் அவள் முகத்தில் குடி கொண்டிருந்தது. சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து அவள் மறுகிக் கொண்டிருப்பதாகவே பட்டது ரவிக்கு.

இரண்டு நாட்களுமே இரவில் அந்த அந்தரங்க இனிமையான வேளையிலே இதமாக அவள் கூந்தலை வருடியவாறே கேட்டுப் பார்த்தான் ரவி.

Continue reading “கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை”

அப்படியும் இப்படியும் – சிறுகதை

அப்படியும் வாழ்க்கை

மாமனாரையும் மாமியாரையும் நினைக்க நினைக்க எரிச்சல் மண்டியது பாபுவிற்கு.

ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டிவி சத்தம் எரிச்சலை அதிகப்படுத்தி தலை ‘கிண் கிண்’ என வலிப்பது போல் தோன்ற குரல் எடுத்து கத்தினான்.

“ஏய் ராணி!” அவனது அலறலை கேட்டு புயல் போல் அறைக்குள் ஓடி வந்தாள் ராணி.

“என்னங்க ஏன் இப்படி கத்தறீங்க?”

Continue reading “அப்படியும் இப்படியும் – சிறுகதை”

கருணை உள்ளம் – சிறுகதை

கருணை உள்ளம்

ஒரு சமயம் வெளிநாடு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போயிருந்தேன்.

அப்போது நான் கண்ட காட்சி.

ஹோட்டலின் வாசலில் ஒரு பெரியவரை விரட்டிக் கொண்டிருந்தார் செக்யூரிட்டி.

பெரியவர் பசியின் காரணமாக வாடி வதங்கி போயிருந்தார்.

Continue reading “கருணை உள்ளம் – சிறுகதை”