வழிகாட்டி – சிறுகதை

வழிகாட்டி - சிறுகதை

அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கான அறையில் அமர்ந்து மும்மரமாகக் கட்டுரை நோட்டுகளைத் திருத்திக் கொண்டிருந்த காயத்ரி டீச்சர் அறைவாசலில் நிழலாடுவதைக் கவனித்து நிமிர்ந்து பார்த்த போது, பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவின் மாணவன் சுரேஷ் தயங்கியபடி நின்று கொண்டிருந்தான்.

“என்ன சுரேஷ்? உள்ளே வா” என்ற டீச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, மெதுவாக அக்கம் பக்கம் பார்த்தபடி பவ்யமாகப் போய் நின்றான் சுரேஷ்.

அவன் ஏதோ சொல்ல வந்திருப்பதை அறிந்த காயத்ரி டீச்சர், “என்ன விஷயம் சுரேஷ்?” எனக் கேட்டார்.

“மேடம், தியாகுவோட அட்டகாசம் நாளுக்கு நாள் ரொம்பவும் அதிகமாயிக்கிட்டே இருக்கு. நேற்று நீங்க அவனைக் கூப்பிட்டுக் கண்டிச்சு வெளியே அனுப்பினீங்கல்லே? அதுக்காக அவன் என்ன செஞ்சுக்கிட்டிருக்கான் தெரியுமா டீச்சர்?” என்றவன் மேற்கொண்டு சொல்ல முடியாமல் தயங்கினான்.

Continue reading “வழிகாட்டி – சிறுகதை”

மிலிட்டரி தாத்தா மைக்கேல்- சிறுகதை

மைக்கேல் தாத்தா

மாதத்திற்கு ஒருமுறை முகச்சவரம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். எத்தனை வயதிலிருந்து சவரம் செய்துகொள்ள ஆரம்பித்தேன் என்பது நினைவில் இருந்தால், இதுவரை எத்தனை சவரம் செய்துள்ளேன் என்பதை சுலபமாக சொல்லி விடலாம்.

அதே போல்தான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தலை முடியை வெட்டிக்கொள்ளும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். அக்குளுக்குள் சவரம் செய்து ஆறு மாதத்திற்கு மேல இருக்கும்.

அக்குளுக்குள் வேர்த்து வேர்த்து சடை பிடித்துப் போய் ஊரையே அழைத்து முடி எடுப்பு விழா எடுக்கலாம் அந்த அளவிற்கு வளர்ந்து கிட‌ந்தது.

Continue reading “மிலிட்டரி தாத்தா மைக்கேல்- சிறுகதை”

பயந்தாங்கொள்ளி நகர் – சிறுகதை

பயந்தாங்கொள்ளி நகர்

‘பயந்தாங்கொள்ளி நகர்’ என்ற அந்த ஊரின் பெயர்ப் பலகையைப் பார்த்ததும் எங்களுக்கே உதறல் எடுக்க ஆரம்பித்தது.

‘வீரமுரசு’ பத்திரிகை நிருபர்களான நாங்கள், தீபாவளி சிறப்பிதழுக்காக ஊர் ஊராய் அலைந்து வித்தியாசமான செய்திகளைத் திரட்டிக் கொண்டிருந்தோம்.

“சார் இந்த ஊர்ல என்ன பெரிய நியூஸ் இருக்க போகிறது?” – எங்களில் ஒருவர் கேட்டார்.

“இந்த தீபாவளி சிறப்பிதழில் கவர் ஸ்டோரியே இந்த ஊரைப் பற்றித்தான். அட்டகாசமான சப்ஜெக்ட் கிடைச்சிருக்கு. தைரியமா வாங்க. ஊருக்குள்ள போய்ப் பார்ப்போம்.” என்றேன்.

Continue reading “பயந்தாங்கொள்ளி நகர் – சிறுகதை”

மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை

மாடென்று எதனைச் சொல்வீர் - சிறுகதை

“40 ஆயிரத்தை கொடுத்து ஒரு கிழ மாட்டை வாங்கி வந்திருக்கியே?” என்று ஊரில் உள்ள எல்லோரும் மாணிக்கத்திடம் துக்கம் விசாரிப்பது போல் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

மாணிக்கம் மாடு வாங்குவதில் ஒன்றும் புதிய ஆள் இல்லை. கடந்த 20 வருடமாக பால் கறந்து வியாபாரம் செய்து வருபவர்.

மாணிக்கம் மாடுகளை குடும்ப உறுப்பினர்களாக பாவிப்பார். மாட்டுக்கு ஏதாவது ஒன்று என்றால் பதறி விடுவார்.

மாடுகள் வயோதிகத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தாலும் மனிதர்களுக்கு செய்வது போலவே ஈமக்கிரியைகள் செய்து போற்றுவார்.

Continue reading “மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை”

அழகுக்கு அழகு – சிறுகதை

அழகுக்கு அழகு

உள்ளம் முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பவானி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

சுவர்க் கடிகாரத்தின் ஒலி மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

‘எப்போது சாப்பிட்டு முடிப்பார்? பேச்சைத் துவங்கலாம்’ என பவானி பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தாள். மகன்கள் இருவரும் வெளியே சென்றிருந்தனர்.

பெரிய பெண் சாந்தி பூஜையறையில் மறுநாள் வெள்ளிக்கிழமை பூஜைக்காகத் தயார்படுத்திக் கொண்டிருக்க, சாந்தியின் தங்கை தீபிகா டி.வி. முன் அமர்ந்து அழகுக் குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணின் அலங்காரத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

Continue reading “அழகுக்கு அழகு – சிறுகதை”