அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கான அறையில் அமர்ந்து மும்மரமாகக் கட்டுரை நோட்டுகளைத் திருத்திக் கொண்டிருந்த காயத்ரி டீச்சர் அறைவாசலில் நிழலாடுவதைக் கவனித்து நிமிர்ந்து பார்த்த போது, பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவின் மாணவன் சுரேஷ் தயங்கியபடி நின்று கொண்டிருந்தான்.
“என்ன சுரேஷ்? உள்ளே வா” என்ற டீச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, மெதுவாக அக்கம் பக்கம் பார்த்தபடி பவ்யமாகப் போய் நின்றான் சுரேஷ்.
அவன் ஏதோ சொல்ல வந்திருப்பதை அறிந்த காயத்ரி டீச்சர், “என்ன விஷயம் சுரேஷ்?” எனக் கேட்டார்.
“மேடம், தியாகுவோட அட்டகாசம் நாளுக்கு நாள் ரொம்பவும் அதிகமாயிக்கிட்டே இருக்கு. நேற்று நீங்க அவனைக் கூப்பிட்டுக் கண்டிச்சு வெளியே அனுப்பினீங்கல்லே? அதுக்காக அவன் என்ன செஞ்சுக்கிட்டிருக்கான் தெரியுமா டீச்சர்?” என்றவன் மேற்கொண்டு சொல்ல முடியாமல் தயங்கினான்.
Continue reading “வழிகாட்டி – சிறுகதை”