பரதேசம் – சிறுகதை

பரதேசம்
பரதேசம் போவதுதான் ஒரே வழியென்றால் செய்து விட வேண்டியதுதான். ஒரு சில நாட்களாக அதே சிந்தனை. 

மாடுகள், உழவு நிலம், கிணறு, மனைவி, மகன், கண்ணுக்குட்டி, அந்த ஒற்றை பனை மரம், 12-ம் நம்பர் பஸ், கருப்பன் நாய், பால்காரம்மா, அய்யனார் எல்லாமே அவ்வபோது நினைவுக்கு வந்தது.

முக்கியமாக மகன், பதினெட்டு வயது. அவன்தான் சொன்னான்.

“எங்கேயாவது போயிரு..”

“சம்பத்து, உம் பேச்சே சரியில்லை.. “

Continue reading “பரதேசம் – சிறுகதை”

வாழ விடுங்கள் – சிறுகதை

வாழ விடுங்கள்

திருமாறன் இரண்டு நாட்கள் லீவில் திருச்சி வந்திருந்தான். தர்மபுரியில் அரசாங்க அலுவலகம் ஒன்றில் பணி புரிபவன். சொந்த ஊரும், மனைவியின் ஊரும் திருச்சியே.

திருமாறனின் பெற்றோர் ஸ்ரீரங்கத்திலும், அவன் மனைவியின் பெற்றோர் திருவெறும்பூரிலும் வசித்து வந்தனர். மனைவி பிறந்த வீடு வந்து பத்து நாட்களாகிறது. மனைவியைக் கூட்டிப் போவதற்காக வந்திருக்கிறான்.

Continue reading “வாழ விடுங்கள் – சிறுகதை”

நல்ல காதல் – சிறுகதை

நல்ல காதல்

காதருகே வந்து “இன்று ஆபீஸ்‌ முடிந்து போகும்‌ போது என்‌ வீட்டுக்கு வந்துவிட்டு போ” என அடிக்குரலில்‌ சொன்னாள்‌ சைந்தவி.

சைந்தவி சொந்த ஊர்‌ பீகார். ஐந்து வயதில்‌ ஒரு மகன்‌ இருக்கிறான். இந்த அலுவலகத்தில், அவள்‌ சினிமா நடிகையை போல்‌ பிரபலமானவள்.

அவள்‌ நிறம்‌, அவள்‌ உடுத்தும்‌ நவ நாகரீக மேட்சிங் உடைகள், ‌வித விதமான ஆபரணங்கள் எல்லாம்‌ சேர்ந்து அவளை ஓர் பேரழகியாக நிலைநிறுத்தி விட்டது.

Continue reading “நல்ல காதல் – சிறுகதை”

துணை – சிறுகதை

துணை

மழை பெய்து ஓய்ந்தாற் போல் அமைதியாக இருந்தது வீடு.

சென்ற ஒரு மாத காலமாக மகள், மாப்பிள்ளை, பேரக் குழந்தைகள் என அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலை இன்று காலை முதல் மாறி விட்டிருந்தது.

அவர்களை வைகை எக்ஸ்பிரஸில் சென்னை அனுப்பிவிட்டு வீடு திரும்பிய சுப்பிரமணியன் தளர்ச்சியுடன் சோபாவில் வந்து உட்கார்ந்தார்.

அவர் வந்ததை அறிந்த விசாலாட்சி ‘பூஸ்ட்’ கலந்து எடுத்து வந்து அவரிடம் நீட்டினாள்.

அதை வாங்கி அருகிலிருந்த டீபாய் மீது வைத்த சுப்பிரமணியன் விசாலாட்சியை உற்று நோக்கினார்.

Continue reading “துணை – சிறுகதை”

பெருந்தன்மை – சிறுகதை

பெருந்தன்மை

காலை 8 மணிக்கே ஆட்கள் வேலைக்கு வந்து விட்டார்கள். மார்பிள் பாலிஷ் போடுகிறவர், உதவியாளர் மற்றும் சித்தாளாக ஒரு பெண்.

குளிக்க கிளம்பிய மருதநாயகம் மாடி வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு, வந்திருந்தவர்களை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

பாலிஷ் போடுகிறவர் சொன்னார். “சார், இன்று அதிகபட்ச வேலை முடிந்து விடும். இந்த சித்தாளுக்கு நாளை வேறு ஒரு வேலை இருக்கு. அதனால் இவங்க அக்கா நாளை சித்தாள் வேலைக்கு வருவாங்க.” என்றவர் பாலிஷ் மெஷினை ஓட்ட ஆரம்பித்தார்.

Continue reading “பெருந்தன்மை – சிறுகதை”