கடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை

கடிகாரம் வாங்கவில்லை

எங்கள் சொந்த ஊரில் உள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் பூ மிதி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

வெகுவிமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் பதினைந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் ‘பூ மிதி’ திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

மூன்றாம் நாள் திருவிழாவில் காலை மூன்று மணி முதலே பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்வு துவங்கும்.

Continue reading “கடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை”

ரம்மியம் – சிறுகதை

ரம்மியம்

ரம்யா இல்லாத வீடு செறிச்சோடி இருந்தது. சுவர்க் கடிகாரம் காலை எட்டு மணியைப் பிரகனப்படுத்தியது. அன்று ஞாயிற்றுக் கிழமை.

அப்போதுதான் சோம்பல் முறித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தான் கிருஷ்ணன். சூடாக காபி சாப்பிட வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

ரம்யா இருந்திருந்தால் சூடாக காபி என்ன? கூடவே ஏதாவது டிபனும் கொடுத்திருப்பாள்.

நேற்று மாலைதான் குழந்தை அருணை அழைத்துக் கொண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் பிறந்த வீட்டிற்கு சேலம் சென்றிருக்கிறாள்.

இனி அருணுக்குப் பள்ளி திறக்கும் சமயம்தான் வருவாள். அருணின் பள்ளி திறக்க இன்னும் இரு வாரங்கள் உள்ளன.

Continue reading “ரம்மியம் – சிறுகதை”

ஒரு வழிப் பாதை – சிறுகதை

ஒரு வழிப் பாதை

அன்று காலை ஊழியர் ஒருவரின் பென்ஷன் சம்பந்தப்பட்ட விவரம் ஒன்றைப் பெறுவதற்காக அக்கவுண்ட்ஸ் பிரிவிற்குச் சென்றான் தெய்வசிகாமணி.

அச்சமயம் வழக்கமான புன்முறுவலுடன் தன்னிடம் பர்சனலாகப் பேசவேண்டும் எனக் காஷியர் லோகநாயகி சொன்னபோது, அது தன் திருமணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் எனக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை அவன்.

அலுவலகக் கேண்டீனில் காலை பதினொன்றரை மணியளவில் ஒதுக்குப்புறமாய் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது லோகநாயகி வந்து விஷயத்தைக் கூறினாள்.

Continue reading “ஒரு வழிப் பாதை – சிறுகதை”

விளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை

விளிம்பில் நிகழும் அற்புதங்கள்

சுஜித்துக்கு இந்த உணவு டெலிவரி செய்யும் வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் எம் பி ஏ படித்து முடித்திருப்பான்.

எவ்வளவு வைத்தியம் பார்த்தும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. எம் பி ஏ இரண்டாவது செமெஸ்டரிலேயே அப்பா இறந்துவிட்டார். அப்பாவுடன் ஆஸ்ப்பிட்டலில் இருந்ததால் ஒரு சில பேப்பரை தவிர எல்லாமுமே அரியர்.

நீச்சல் தெரியாதவனை நடுக்கடலில் தூக்கி போட்டது போல், காலம் சுஜித்தை தூக்கி எறிந்து விட்டது. உடனடியாக இந்த வேலைதான் கிடைத்தது.

அப்பாவின் டூ வீலரை ஆசைக்கு கூட ஓட்டிப் பார்க்கத் தரமாட்டார். இப்போது மொத்த வாழ்க்கையும் இந்த டூ வீலரில் கழிகிறது.

Continue reading “விளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை”

அட்மிஷன் – சிறுகதை

அட்மிஷன்

அட்மிஷன் போடுவதற்கு, ஃபைலில் மலை போல் குவிந்து கிடந்த விண்ணப்ப படிவங்களைப் பரிசீலனை செய்யத் தயாரானார் வெங்கடேஸ்வரன்.

அவரது பெயருக்குக் கீழே ‘ஹெட்மாஸ்டர்’ என்று பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று டேபிளில் அவர் முன் காட்சியளித்தது.

ஏதோ கேட்பதற்காகக் காலிங் பெல்லை அழுத்தி பியூனை அழைத்தபோது டேபிளை அலங்கரித்த போன் இவரை அழைத்தது.

ரிசீவரை எடுத்துக் காதில் வைத்த போது எதிர்முனையில் “இஸ் மிஸ்டர் வெங்கடேஸ்வரன் அவைலபிள்?” என்றதோர் குரல் கேட்டது.

Continue reading “அட்மிஷன் – சிறுகதை”