தவப்புதல்வன் – சிறுகதை

தவப்புதல்வன்

தவப்புதல்வன் ஓர் அருமையான சிறுகதை.

காவிரிப் பாலம் தான் திருச்சியின் பீச்.

காவிரி கரை புரண்டு ஓடாவிட்டாலும், பாலச்சுவரைப் பிடித்துக் கொண்டு, மாலை நேர இதமான காற்றின் சுகத்தை அனுபவித்தவாறே மணிக்கணக்கில் காவிரியைப் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விடுவது, மக்களின் பொழுது போக்கு அம்சமாகி விட்டது.

பல்வேறு சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள், செயல்கள் மூலம் ஏற்படும் ஒருவிதமான இறுக்கத்தை மாலை வேளையில் காவிரித் தாயின் திருவடிகளில் இறக்கி வைத்து விட்டுச் செல்வதில் மக்களுக்கு ஓர் ஆத்ம திருப்தி.

Continue reading “தவப்புதல்வன் – சிறுகதை”

எண்ணங்கள் வெளுப்பதில்லை – சிறுகதை

எண்ணங்கள் வெளுப்பதில்லை

கல்கத்தாவுக்கு மாற்றலாகிச் செல்லும் மேலதிகாரியை ஸ்டேஷனில் வழியனுப்பக் குடும்ப சகிதம் வந்து கொண்டிருந்தார் ராமகிருஷ்ணன்.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ஒன்பது மணிக்குத்தான். தில்லை நகரிலிருந்து எட்டரை மணிக்குக் கிளம்பியிருந்தாலே போதுமானது.

ஒரு மாற்றத்திற்காக அன்றைய இரவு உணவை, கவிதாவில் வைத்துக் கொள்ள ஏகமனதாக அனைவரும் முடிவெடுத்திருந்ததால், ஏழே முக்கால் மணிக்கே காரை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் கிளம்பியாகி விட்டது.

Continue reading “எண்ணங்கள் வெளுப்பதில்லை – சிறுகதை”

இந்த புன்னகை என்ன விலை?

இந்த புன்னகை என்ன விலை?

“ஏய் சித்ரா… இங்கே வா சீக்கிரம்” கணவனின் கத்தலைக் கேட்டு, போட்டது போட்டபடி கிடக்க சமையலறையிலிருந்து அவசர அவசரமாய் ஹாலுக்கு வந்தாள் சித்ரா.

“இவனைப் முதல்ல பிடி. கர்மம்… கர்மம் இதோட மூணு லுங்கி மாத்திட்டேன். சனியன், இவனுக்கு இதே வேலையாய்ப் போச்சு.”

தன் ஒரு வயது மகனை இரு கைகளால் மார்புக்கு நேராக அந்தரத்தில் தூக்கிப் பிடித்தபடியே முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு கத்திக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

அவனது பனியன் பாதியும், லுங்கி பாதியும் நனைந்திருந்தது.

Continue reading “இந்த புன்னகை என்ன விலை?”

கடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை

கடிகாரம் வாங்கவில்லை

எங்கள் சொந்த ஊரில் உள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் பூ மிதி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

வெகுவிமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் பதினைந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் ‘பூ மிதி’ திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

மூன்றாம் நாள் திருவிழாவில் காலை மூன்று மணி முதலே பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்வு துவங்கும்.

Continue reading “கடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை”

ரம்மியம் – சிறுகதை

ரம்மியம்

ரம்யா இல்லாத வீடு செறிச்சோடி இருந்தது. சுவர்க் கடிகாரம் காலை எட்டு மணியைப் பிரகனப்படுத்தியது. அன்று ஞாயிற்றுக் கிழமை.

அப்போதுதான் சோம்பல் முறித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தான் கிருஷ்ணன். சூடாக காபி சாப்பிட வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

ரம்யா இருந்திருந்தால் சூடாக காபி என்ன? கூடவே ஏதாவது டிபனும் கொடுத்திருப்பாள்.

நேற்று மாலைதான் குழந்தை அருணை அழைத்துக் கொண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் பிறந்த வீட்டிற்கு சேலம் சென்றிருக்கிறாள்.

இனி அருணுக்குப் பள்ளி திறக்கும் சமயம்தான் வருவாள். அருணின் பள்ளி திறக்க இன்னும் இரு வாரங்கள் உள்ளன.

Continue reading “ரம்மியம் – சிறுகதை”