கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருந்திடல் உனக்கே சரியாமோ?
என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார். Continue reading “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்”
இணைய இதழ்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருந்திடல் உனக்கே சரியாமோ?
என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார். Continue reading “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்”
ஒட்டகம் போல் முன்னேறு என்ற கதை, இலக்கை நோக்கிய நம் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிறது.
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வில் முன்னேற வேண்டும் என்று எண்ணி செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு முன்னேறுவதில் பொறுமை மிகவும் அவசியமான ஒன்று.
இலக்கை அடைவது மட்டுமே வாழ்க்கை அல்ல. இலக்கை நோக்கி நடக்கும் வழிப்பயணமும் வாழ்க்கை தான். Continue reading “ஒட்டகம் போல் முன்னேறு”
சஞ்சாரம் என்ற நாவலை எழுதியதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை இனிது வாழ்த்துகிறது.
கரிசல் மண்ணின் நாதசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியல், நாதசுரக் கலையின் சிறப்புகள், நாதசுரக் கலைஞர்களின் சாதியச் சூழல் ஆகியவற்றை சஞ்சாரம் நாவல் விவரிக்கிறது.
இலக்கியத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் எஸ்.ராமகிருஷ்ணன் மேலும் பல சிறப்புகளைப் பெற இனிது வாழ்த்துகிறது.
தனிமைதான் எனக்கு நிரந்தரம் என்று ஆனது
யாரிடமும் எதுவும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை
நலம் கேட்போரின் வார்த்தையில் உயிரோட்டம் இல்லை
சின்ன சின்ன சந்தோசங்களுக்கு மனம் ஆசைப்படுகிறது
ஐந்து வருடம் காப்பாற்றிய கவுரவம் காற்றில் போனது
மௌனத்தை என் மீது திணித்தது வாழ்க்கை
இங்கு எது பேசுவதற்கும் யோசனையாக இருக்கிறது
என் பொறுப்புகளை கையாள வழி தேடுகிறது மனசு
நம்பிக்கை கொண்ட மனத்திற்கு பாதை எங்கும் வழிகள்
என்ற கூற்று என் முன்னே பொய்த்து போனதோ?
கணவனாக, தந்தையாக, மகனாக, நல்ல உறவாக
என் பொறுப்புகள் செய்யப்படாமல் கிடக்கின்றன
சார்ந்து இருந்து பழக்கப்படாத மனது
உறவுகள் செய்யும் உதவியில் தொய்மை அடைகிறது
சோதனைகளை சாதனைகளாக்கும் என் மனதிற்கு
இப்பொழுது ஒய்வு காலமாக இருக்கிறது
மறுபடியும் வாய்ப்பிற்கு காத்திருக்கிறேன் நான்
என் உறவுகளுக்கு என்ன நலமானது பண்ண முடியுமோ
அதனை முடிக்க தருணம் வரும் வரை காத்திருக்கிறேன்
வாழ்க்கை என்னை மறுபடியும் புடம் போடுகிறது
எங்கு வீழ்த்தப்பட்டேனோ அங்கேயே மீண்டும் எழுவேன்
நான் பக்குவப்பட இயற்கை தடைகளைக் கொடுக்கிறது
நான் பக்குவப்பட இயற்கை தனிமையைக் கொடுக்கிறது
இதனை சாபமாகக் கருதாமல் வரமாகக் கொள்வேன்
வெற்றி தோல்வி காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவை
என்ற நியதி உணர இயற்கை தனிமை தருகிறது
என்னை சுற்றி எது நடந்தாலும் நடக்கட்டும்
சூழ்நிலையால் பாதிக்கப்படும் கைதியல்ல நான்
வாய்ப்புகளை வரமாக மாற்ற இன்னும்
இனிய பக்குவத்திற்கு காத்திருக்கும் நான்
– சிறுமலை பார்த்திபன்
அன்பு என்பது பண்டமாற்று முறையாய் இப்பொழுது இங்கு மாறிவிட்டது.
இதயம் முழுவதும் நேசம் பொங்க, இதயசிரிப்பில் முகம் மலர, உதட்டோர புன்னகையை தேக்கி ஆழமான நேசப்பார்வை காண்பது அரிதாகிவிட்;டது.
எங்கே தொலைத்தோம் அந்த அன்பு என்ற கண்ணியை.
வறுமையிலும் கொடிய வறுமை அன்பு வறுமை.
Continue reading “எங்கே போனது அன்பு நீருற்று?”