என் உயிர் தந்த என் உயிருக்கு
உயிர் வந்த நாள் இன்று!
கண்ணுக்குள் வைத்தென்னைக் காப்பாற்றும்
கண்மணி அவள் கண்விழித்த நாள் இன்று!
Continue reading “மகளின் பிறந்த நாள் வாழ்த்து”இணைய இதழ்
என் உயிர் தந்த என் உயிருக்கு
உயிர் வந்த நாள் இன்று!
கண்ணுக்குள் வைத்தென்னைக் காப்பாற்றும்
கண்மணி அவள் கண்விழித்த நாள் இன்று!
Continue reading “மகளின் பிறந்த நாள் வாழ்த்து”“40 ஆயிரத்தை கொடுத்து ஒரு கிழ மாட்டை வாங்கி வந்திருக்கியே?” என்று ஊரில் உள்ள எல்லோரும் மாணிக்கத்திடம் துக்கம் விசாரிப்பது போல் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
மாணிக்கம் மாடு வாங்குவதில் ஒன்றும் புதிய ஆள் இல்லை. கடந்த 20 வருடமாக பால் கறந்து வியாபாரம் செய்து வருபவர்.
மாணிக்கம் மாடுகளை குடும்ப உறுப்பினர்களாக பாவிப்பார். மாட்டுக்கு ஏதாவது ஒன்று என்றால் பதறி விடுவார்.
மாடுகள் வயோதிகத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தாலும் மனிதர்களுக்கு செய்வது போலவே ஈமக்கிரியைகள் செய்து போற்றுவார்.
Continue reading “மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை”கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
செயற்கை – 57% (16 வாக்குகள்)
இயற்கை – 43% (12 வாக்குகள்)
மனம் என்பது மனிதன் ஆகலாம்
மனிதன் என்பவன் மனம் ஆகலாம்
நீ கூட்டம் கூட்டமாக எங்கே ஊர்ந்து
கொண்டு போகிறாய் மனமே?
நீ கணித்த இலக்கு அடுத்த நிமிடம்
நிரந்தரமற்றது என்று அறிவாயா மனமே?
நீ உன்னை அறியாமல் எத்தனை சக
மனதினைக் காயப்படுத்தினாய் மனமே?
உள்ளம் முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பவானி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
சுவர்க் கடிகாரத்தின் ஒலி மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.
‘எப்போது சாப்பிட்டு முடிப்பார்? பேச்சைத் துவங்கலாம்’ என பவானி பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தாள். மகன்கள் இருவரும் வெளியே சென்றிருந்தனர்.
பெரிய பெண் சாந்தி பூஜையறையில் மறுநாள் வெள்ளிக்கிழமை பூஜைக்காகத் தயார்படுத்திக் கொண்டிருக்க, சாந்தியின் தங்கை தீபிகா டி.வி. முன் அமர்ந்து அழகுக் குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணின் அலங்காரத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
Continue reading “அழகுக்கு அழகு – சிறுகதை”