ஊரோரம் அய்யனாரு
காவலிருந்த காலத்துல
ஊருக்குள்ளே களவு இல்லை…
பெண்களின் கற்புக்கும் பங்கில்லை…
Continue reading “எங்கே போன அய்யனாரே?”இணைய இதழ்
ஊரோரம் அய்யனாரு
காவலிருந்த காலத்துல
ஊருக்குள்ளே களவு இல்லை…
பெண்களின் கற்புக்கும் பங்கில்லை…
Continue reading “எங்கே போன அய்யனாரே?”அடர்ந்த காடுகளும் மலைகளும் ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியுடன் கூடிய புறக்காவல் நிலையம் ஒன்றில்தான் ஒண்டி ஏட்டு பணிபுரிகிறார்,
மலையின் அடிவாரத்தில் உள்ள சில கிராமங்களுக்கும் சேர்த்துதான் இந்த காவல் நிலையம். ஒண்டி ஏட்டு இந்த கிராமங்களின் ஆதி அந்தத்தை அறிந்தவர்.
முக்கியமாக காடுகளில் பதுங்கி தீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் சொல்வதில் வல்லவர்.
Continue reading “ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை”பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு அதிகாலை திருமணம்.
சென்னையிலிருந்து எப்படியாவது போயே ஆகவேண்டும், இல்லையேல் சுனாமி வந்து விடும். ஏற்கனவே எங்கள் உறவு என்கிற ஓஸோனில் ஓட்டை விழுந்து கிடக்கிறது .
அலுவலகத்தில் ஒரு நாள் விடுப்பு கேட்டால் பூகம்பம் வெடிக்கும். நான் இல்லையென்றால் அலுவலகமே ஸ்தம்பித்து விடும் என்கிறார்கள்.
மனைவியை மட்டும் அனுப்பி வைக்கலாம் என்றால், கொரோனாவால் பஸ் போக்குவரத்தும் இல்லை.
“ஓலா அவுட் ஸ்டேஷன் டாக்ஸி புக் செய்து தருகிறேன். நீ மட்டும் போய் வா.” என்று சொன்னதனால் ஏற்பட்ட சண்டை, சீன எல்லையான கள்வான் பள்ளத்தாக்கில் நடந்ததை விட மோசமாக இருந்தது.
“அதிகாலை 3 மணிக்கு யாருன்னே தெரியாத ஓலா டிரைவரை நம்பி என்னை அனுப்பி வைக்க நினைக்கிறீங்களே. நாட்டு நடப்பு எதாவது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?” என்று அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் டாப் கிளாஸ். தலைமை நீதிபதியே இவ கிட்ட நிறைய கத்துக்கனும்.
Continue reading “ஓலா – சிறுகதை”நான் கல்லூரி முடித்து வீடு செல்லும் வழியில், என் தங்கையின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன்.
அப்பொழுது ஒரு பாட்டி ஐந்தாறு பேருடன் சேர்ந்து புளியம்பழத்தை உடைத்து, நார் உருவி, கொட்டை எடுத்துக் கொண்டிருந்தார்.
அவர்களின் பேச்சு என் மனதிற்கு போதை அளித்ததாகத் தெரியவில்லை. ஏதோ ஒன்னு மனதில் பளிச்சென்று வெட்டிச்சென்றது போலவும், அதனூடே நினைவுகள் வடிந்தது போலவும் உணர்ந்தேன்.
அது பழைய அனுபவம்தான் எனினும் புதுமலர்ச்சியைத் தந்தது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் – பகுதி 6
Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-6”