இயற்கை நம் முன் இரண்டு வாய்ப்புக்களை வைக்கின்றது.
ஒன்று மாசு படாத இயற்கையான பூமி
அடுத்தது மாசுபட்ட வாழத் தகுதியற்ற பூமி
எது நம் தேர்வு? நீ யோசி!
இணைய இதழ்
இயற்கை நம் முன் இரண்டு வாய்ப்புக்களை வைக்கின்றது.
ஒன்று மாசு படாத இயற்கையான பூமி
அடுத்தது மாசுபட்ட வாழத் தகுதியற்ற பூமி
எது நம் தேர்வு? நீ யோசி!
விழி பேசும் மொழி காதல்தானே
மெளனத்தின் ஆட்சி இங்கே நடக்கிறதே
சிரிப்பும் வெட்கமும் விழிகளில் வழிகிறதே
இனிமைகள் இங்கே குவிந்து கிடக்கிறதே
Continue reading “விழி பேசும் மொழி – கவிதை”கொண்டாட்டம் வாழ்வில் முக்கியமான ஒன்று. இயந்திரத்தனமான வாழ்க்கையை இனிதாக்குவது கொண்டாட்டம்.
இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அடுத்ததாக திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகள். கூடவே வேலை செய்யும் இடத்திலான கேளிக்கைகள்.
தனி மனிதர்களைச் சார்ந்த விழாக்களையே நாம் இன்று பெரிதும் காண்கிறோம். அவை சிலரை மகிழ்விக்கும்; சிலரை சோர்வாக்கும்.
அப்படி இல்லாமல் எல்லோரும் எப்போதும் கொண்டாட்டத்திலேயே இருந்தால் எப்படி இருக்கும்?
வாருங்கள்! காலச் சக்கரத்தில் நமது பழைய கிராமத்திற்கு சென்று வருவோம். நம்மை அழைத்துச் செல்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
Continue reading “கிராமம் - பாகம் 2 – என்றென்றும் கொண்டாட்டம்”மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது? என்ற கேள்வி, தூங்கணாங்குருவியைப் பற்றி அம்மா சொல்லிக் கொண்டிருந்த போது எனக்குள் தோன்றியது.
“தூங்கணாங்குருவி, குஞ்சுகளுக்கு வெளிச்சம் தருவதற்காக ஈரக் களிமண்ணைத் தோண்டி எடுத்து கூட்டில் வைத்து, அதில் மின்மினிப் பூச்சியை பொதிந்து வைக்குமாம்.” என்று அம்மா தான் கேள்விப்பட்டிருப்பதாகக் கூறினார்.
காரணம் மின்மினிப் பூச்சியும் தூங்கணாங்குருவியும் மாசுபடாத நீருள்ள ஈரப்பதமான இடங்களையே வாழிடங்களாகக் கொண்டவை.
Continue reading “மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது?”கடற்கரை அழகினைப் பாடிடுவோம் – கடற்
காற்று தரும்சுகம் நாடிடுவோம்
படர்மணற் பரப்பினில் கால்பதித்தே – பிணி
பறந்திட உடல்வளம் கூடிடுவோம்
Continue reading “களிப்பூட்டும் கடற்கரை”