நீர் ‍- நேற்றும் இன்றும்

நீரின்று அமையாது உலகு

வேண்டும் போது பொருள் தேடலாம்; இடம் தேடலாம்; பணம் தேடலாம்; ஆனால் ஒன்றை மட்டும் கிடைக்கும் போது பெற்றுச் சேமிக்கவில்லை என்றால், தேவைக்குக் கிடைக்காது.

அது நீர்.

Continue reading “நீர் ‍- நேற்றும் இன்றும்”

இலக்கியங்களில் இறைவன்

இலக்கியங்களில் இறைவன்

இலக்கியங்களில் இறைவன் உறைந்திருக்கிறான். இதை நாம் அனைவரும் உணர வேண்டும். இறைவன் நம்மை விட உயர்ந்தவன் என்பதால் மட்டுமே அவனை இலக்கியம் போற்றவில்லை. ஒரு மனிதன் நல்வாழ்வின் மூலம் உயர்நிலை அடையலாம் என்பதை உணர்த்தவே இலக்கியம் இறைவனை ஓயாது பாடுகிறது.

தமிழ் இலக்கியங்களை ‘காலத்தால் முற்பட்டவை மற்றும் பிற்பட்டவை’ என வகைபடுத்தி வைத்துள்ளோம்.

இவற்றுள் ‘சங்ககால இலக்கியங்கள்’என்றும் ‘சங்ககாலத்தை ஒட்டியவை’ என்றும்,’பெரும் காப்பியங்கள்’ என்றும்,’சிறுகாப்பியங்கள்’ என்றும் உள்ளன.

பண்டைய இலக்கியங்களில் இறைவன் பற்றிக் குறிப்பிடாத இலக்கியங்கள் இல்லை என்பதால் நம் மொழியை ‘தெய்வத்தமிழ்‘ என்று போற்றுகின்றோம்.

தெய்வமே தமிழைத் தந்ததாக போற்றுகின்றோம்.

Continue reading “இலக்கியங்களில் இறைவன்”

பூணூல் – ஓர் அறிமுகம்

பூணூல்

பூணுகின்ற (அணிகின்ற‌) நூல் பூணூல் ஆனது. இந்தப் பூணூலை எல்லோரும் தரிக்கலாம். இன்னார்தான் தரிக்க வேண்டுமென எந்த நியதியுமில்லை.

அறிந்தவர்கள் முப்புரிநூலை அணிந்திருந்ததாக சங்க இலக்கியங்களில் காண்கின்றோம்.

“புரி நூல் மார்பீர்” என்று மணிமேகலையில் பேசக் காண்கின்றோம்.

Continue reading “பூணூல் – ஓர் அறிமுகம்”

சாதி – சில சிந்தனைகள்

சாதி - சில சிந்தனைகள்

சாதி என்பது ஓர் இந்தியனின் முக்கியமான அடையாளம். நம்முடைய சிந்தனையில் சாதி என்பது பிரிக்க முடியாதது. நாம் சாதியைக் கடந்து போக நினைத்தாலும், இந்த சமூகம் அவ்வளவு எளிதில் நம்மை விட்டு விடாது.

அடையாளம் என்பதைத் தாண்டி ஆதாரம் என்ற நிலையை நோக்கி சாதி நகர்கிறது. சாதியை நமக்கான ஒரு பலம் பொருந்திய பின்ணணியாக நாம் பார்க்கிறோம்; நம் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதனை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.

சாதியை விட்டு விட்டு நம்மால் யோசிக்க முடியவில்லை.

ஒருபுறம் நல்ல கல்வி பெற்ற, பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் சாதியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலை கொஞ்சம் தோன்றுகிறது.

மறுபுறம் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் உருவாக்கும் சாதிப் பற்று, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள அதிகம் படிக்காத, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மிக எளிதாக சாதி வெறியர்களாக மாற்றி விடுகிறது.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ சாதி ஒரு மறுக்க முடியாத சக்தி. சாதி பற்றிய ஒரு தெளிவு இருந்தால்தான் இந்தியாவில் பொதுவாழ்வில் நாம் ஏதேனும் சிறிதளவு நல்ல வழியில் பங்காற்ற முடியும்.

அத்தகைய ஒரு தெளிவைத் தன் இலக்கிய ஆராய்ச்சியின் மூலம் நமக்கு வழங்குகிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “சாதி – சில சிந்தனைகள்”

கிராமம் – இயற்கையோடு இணைந்து வாழ்தல்

இயற்கையோடு இணைந்து வாழ்தல்

இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். உலக வெப்பமயமாதல் என்ற கத்தி மனித சமூகத்திற்கு மேலே தொங்கிக் கொண்டு இருக்கின்றது.

இன்றைய தலைமுறை இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பதைப் புறக்கணித்தால், மனிதன் பூமியில் வாழ்ந்தான் என்று எதிர் காலத்தில் பிற உயிரினங்கள் நினைத்துப் பார்க்கும் நிலை வரலாம்.

இயற்கையிலிருந்து நாம் வெகுதொலைவுக்கு வந்து விட்டோம் என்று இன்றைய தலைமுறை நினைக்கலாம். ஆனால் 30 ஆண்டுகளாகத்தான் நாம் நிறைய மாறி விட்டிருக்கிறோம்.

நம் வாழ்வில் மிக வேகமாகப் பயணம் செய்கிறோம். ஆனால் போகும் பாதை சரிதானா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பது எளிதான ஒன்றாக இருந்தது. அந்த வாழ்க்கை முறையை நமக்கு விளக்குகிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “கிராமம் – இயற்கையோடு இணைந்து வாழ்தல்”