காளான் குழம்பு – சிறுகதை

சுவையான காளான் குழம்பு

காளான் குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது.

என்னுடைய மகள் பிள்ளை பேத்திக்கு காளான் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.

“ஆச்சி நீங்க வைக்கும் காளான் குழம்பின் ருசியே தனி. இன்னைக்கு மதியம் குழம்பு காளான்தான்.” என்று என்னைக் கட்டியணைத்து கெஞ்சினாள்.

“உனக்கு செய்து தராம வேறு யாருக்கு செஞ்சுதரப் போறேன் என் கன்னுக்குட்டி.” என்றபடி அவளின் கன்னத்தை மெதுவாகக் கிள்ளிக் கொஞ்சி காளான் குழம்பினை தயார் செய்து கொண்டிருந்தேன்.

காளான் குழம்பின் செய்முறை என்னுடைய தாய்வழி பாட்டியிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது.

என்னுடைய பாட்டி கைதேர்ந்த சமையலரசி. எந்த உணவினைத் தயார் செய்தாலும் எளிமையான மூலப்பொருட்களையே உபயோகிப்பார். அவரின் சமையலுக்கு நான் மிகப்பெரிய ரசிகை.

Continue reading “காளான் குழம்பு – சிறுகதை”

மனிதரில் இத்தனை நிறங்களா?

வண்ணத்துப்பூச்சி

கூட்டுப் புழுவாக அடைந்து கிடந்து

தன்னிலை உணர்ந்து கூட்டினை

உடைத்து வண்ணச் சிறகடித்து

வெளிவருகிறது வண்ணத்துப்பூச்சி …

Continue reading “மனிதரில் இத்தனை நிறங்களா?”

மகள் ஒரு தொடர்கதை – சிறுகதை

மகள் ஒரு தொடர்கதை

பந்தலும் தோரணமும் வாழை மரங்களும், பந்தலுக்கு நடுவே ‘வருக வருக’ என எழுதி மின்மினிப் பூச்சிகள் போல் விட்டு விட்டு மினுமினுக்கும் மின்சார விளக்குள்ள பலகையும், பந்தலுக்கு அடியில் வரிசையாக போடப்பட்டிருந்த மரத்தாலான இருக்கைகளும், சுரைக்காய் போல் பந்தல் மேல் இடைவெளி விட்டு நீட்டியிருந்த இரண்டு புனலில் ஓயாமல் கலகலப்பாக ஒலித்துக் கொண்டிருந்த சினிமா பாடல்களும் மனோ வீட்டில் ஏதோ விஷேஷம் என்பதை வெளிப்படுத்தின.

Continue reading “மகள் ஒரு தொடர்கதை – சிறுகதை”

உணர்வற்றுப் போயினரே! – கவிதை

அரிச்சந்திரன் வாழ்ந்த மண்ணில் இன்று

ஆண்ட்ராய்டு மட்டுமே அரிச்சந்திரன்

துரியோதனன் காட்டிய நட்பு இன்று

துரிதமான ஸ்டேட்டஸ் அப்டேட்ஸில் மட்டுமே

Continue reading “உணர்வற்றுப் போயினரே! – கவிதை”

வாய் முகூர்த்தம் – சிறுகதை

வாய் முகூர்த்தம் - சிறுகதை

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு, நான் அவரை சந்தித்தேன். அவர் வேறு யாரும் இல்லை எனது சித்தப்பாதான்.

என் அப்பாவின் உடன் பிறந்த தம்பி. இருவருக்குள்ளும் தாய் வழி உறவுதானே தவிர, தந்தை வழி உறவு கிடையாது.

எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அவரது வீட்டுக்குள் சென்றேன்.

வீட்டில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள்.

அந்த கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தார் அவர்.

நான் அவர் அருகில் சென்றுதான் நின்று கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. 

Continue reading “வாய் முகூர்த்தம் – சிறுகதை”