அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்

இந்தியாவின் அனைத்து பாகங்களிலும், குறிப்பாக சூரிய வெளிச்சமும், ஈரப்பசையுடன் கூடிய தட்ப வெப்ப நிலைப் பகுதிகளில் அருகம்புல் வளர்கிறது.

‘சைனோடோன்’ (Cynodon), ‘டேக்டைலோன் பெர்ஸ்’ (dactylon pers) என்பது அருகம்புல்லின் தாவரவியல் பெயர்.

வ‌டமொழியில் ‘தூர்வா'(Dhoorva) என்றும், இந்தியில் ‘தூப்’ (Dhoob) எனவும் அழைக்கப்படுகிறது.

Continue reading “அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்”

அழகுக்கு அழகு – சிறுகதை

அழகுக்கு அழகு

உள்ளம் முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பவானி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

சுவர்க் கடிகாரத்தின் ஒலி மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

‘எப்போது சாப்பிட்டு முடிப்பார்? பேச்சைத் துவங்கலாம்’ என பவானி பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தாள். மகன்கள் இருவரும் வெளியே சென்றிருந்தனர்.

பெரிய பெண் சாந்தி பூஜையறையில் மறுநாள் வெள்ளிக்கிழமை பூஜைக்காகத் தயார்படுத்திக் கொண்டிருக்க, சாந்தியின் தங்கை தீபிகா டி.வி. முன் அமர்ந்து அழகுக் குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணின் அலங்காரத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

Continue reading “அழகுக்கு அழகு – சிறுகதை”

வீணையடி நீ எனக்கு – சிறுகதை

வீணையடி நீ எனக்கு

நர்மதாவை நாராயணனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எதையுமே தேர்வு செய்யும் விஷயத்தில் நாராயணனை மிஞ்ச எவருமில்லை என்னும் கூற்று, அவனைப் பொறுத்த மட்டில் இப்போதெல்லாம் பேத்தலாகவே பட்டது.

நண்பர்களும் உறவினர்களும் அவனைப் பற்றி வானளாவப் புகழ்ந்து தள்ளுகிற போதெல்லாம் ரொம்பப் பெருமையாகத்தான் இருந்தது. எல்லாம் திருமணமாகும் வரைதான்.

அலுவலக நண்பர்களின் பிரிவுபசார விழாவாகட்டும், உறவினர்களின் திருமணமாகட்டும் பரிசுகள் வாங்குவதிலிருந்து புடவை, நகை, பாத்திரங்கள் எதுவாயிருப்பினும் நாராயணன் இல்லாமல் எதுவும் நடக்காது.

அவ்வளவு நேர்த்தியாக, பாங்காக, தரமாகத் தேர்வு செய்வான். அவன் தேர்வு செய்துவிட்டால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விடலாம்.

Continue reading “வீணையடி நீ எனக்கு – சிறுகதை”

மறுமணம் – சிறுகதை

மறுமணம் - சிறுகதை

மஞ்சுளா மறைந்து ஓராண்டு முடிந்து விட்டது.

ராமகிருஷ்ணன் முகத்தில் அப்பியிருந்த சோகம் மட்டும் மாறவில்லை.

ஷீலா பிறந்தது முதல் அவள் உடம்பை ஒன்று மாற்றி ஒன்று படுத்திக் கொண்டேயிருந்தது.

மனோ, யு.கே.ஜி போய்க் கொண்டிருந்தான்.

ஆயிரம் அலுவல்களுக்கிடையேயும் மஞ்சுளாவை அக்கறையுடன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தான்.

Continue reading “மறுமணம் – சிறுகதை”

காயமே இது பொய்யடா – ஒர் பார்வை

காயமே இது பொய்யடா

உடலின் வெளிப்புறத்தில் தாக்குதல் ஏற்படுவதால் வரும் பாதிப்பே ‘ட்ரௌமா’ என்று சொல்லப்படுகிறது. ‘ட்ரௌமா’ என்றால் காயம் என்று பொருள்.

வன்முறைத் தாக்குதல் மூலம் உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களைப் பற்றி விரிவாக அலசப்படும் ஓர் அறிவியல் பாடம்தான் ‘ட்ரௌமடாலஜி’ (Traumatology).

விபத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக் குறித்து இதில் விரிவாக விளக்கப்படுகிறது.

Continue reading “காயமே இது பொய்யடா – ஒர் பார்வை”