சுயசேவையா… சே… சே… – சிறுகதை

சுயசேவையா... சே... சே... - சிறுகதை

மாலை அலுவலகம் முடிந்து மறுநாளைக்குத் தேவையான காய்கறிகளை ஒவ்வொன்றாய் பார்த்து வாங்கி பையில் நிரப்பிக் கொண்டு, ரொம்பவும் களைப்புற்றவனாய் தளர்ந்த நடையுடன் ‘அண்ணா நகர்’ பஸ்ஸைப் பிடிக்க வந்து கொண்டிருந்தபோது, வழி நெடுக பல ஹோட்டல்கள் கண்ணில் பட, விலைப்பட்டியலோ பயமுறுத்த, உள்ளே நுழையத் தயங்கினான் சேகர்.

தெப்பக்குளம் எதிரிலிருந்த சிந்தாமணி கேண்டீனைக் கண்டதும் மனதில் ‘குபுக்’கென மகிழ்ச்சி பொங்கியது அவனுக்கு.

Continue reading “சுயசேவையா… சே… சே… – சிறுகதை”

தனிக்குடித்தனம் – சிறுகதை

தனிக்குடித்தனம் - சிறுகதை

தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என இரண்டு மாதங்களாகவே வித்யா, பாலனை நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவளது இந்த எண்ணத்தை மாற்ற பாலன் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை.

அப்பாவையும் அம்மாவையும் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக விட்டுச் செல்ல பாலனுக்கு இஷ்டமில்லை.

‘இவளுக்கு என்ன குறைச்சல் இங்கே? அம்மா வித்யாவை உள்ளங்கையில் வைத்துத்தான் தாங்குகிறாள். வித்யா வேலைக்குச் செல்வதைப் பற்றியும் இருவரும் எதுவும் சொல்லவில்லை.

Continue reading “தனிக்குடித்தனம் – சிறுகதை”

வழிகாட்டி – சிறுகதை

வழிகாட்டி - சிறுகதை

அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கான அறையில் அமர்ந்து மும்மரமாகக் கட்டுரை நோட்டுகளைத் திருத்திக் கொண்டிருந்த காயத்ரி டீச்சர் அறைவாசலில் நிழலாடுவதைக் கவனித்து நிமிர்ந்து பார்த்த போது, பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவின் மாணவன் சுரேஷ் தயங்கியபடி நின்று கொண்டிருந்தான்.

“என்ன சுரேஷ்? உள்ளே வா” என்ற டீச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, மெதுவாக அக்கம் பக்கம் பார்த்தபடி பவ்யமாகப் போய் நின்றான் சுரேஷ்.

அவன் ஏதோ சொல்ல வந்திருப்பதை அறிந்த காயத்ரி டீச்சர், “என்ன விஷயம் சுரேஷ்?” எனக் கேட்டார்.

“மேடம், தியாகுவோட அட்டகாசம் நாளுக்கு நாள் ரொம்பவும் அதிகமாயிக்கிட்டே இருக்கு. நேற்று நீங்க அவனைக் கூப்பிட்டுக் கண்டிச்சு வெளியே அனுப்பினீங்கல்லே? அதுக்காக அவன் என்ன செஞ்சுக்கிட்டிருக்கான் தெரியுமா டீச்சர்?” என்றவன் மேற்கொண்டு சொல்ல முடியாமல் தயங்கினான்.

Continue reading “வழிகாட்டி – சிறுகதை”

அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்

இந்தியாவின் அனைத்து பாகங்களிலும், குறிப்பாக சூரிய வெளிச்சமும், ஈரப்பசையுடன் கூடிய தட்ப வெப்ப நிலைப் பகுதிகளில் அருகம்புல் வளர்கிறது.

‘சைனோடோன்’ (Cynodon), ‘டேக்டைலோன் பெர்ஸ்’ (dactylon pers) என்பது அருகம்புல்லின் தாவரவியல் பெயர்.

வ‌டமொழியில் ‘தூர்வா'(Dhoorva) என்றும், இந்தியில் ‘தூப்’ (Dhoob) எனவும் அழைக்கப்படுகிறது.

Continue reading “அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்”

அழகுக்கு அழகு – சிறுகதை

அழகுக்கு அழகு

உள்ளம் முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பவானி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

சுவர்க் கடிகாரத்தின் ஒலி மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

‘எப்போது சாப்பிட்டு முடிப்பார்? பேச்சைத் துவங்கலாம்’ என பவானி பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தாள். மகன்கள் இருவரும் வெளியே சென்றிருந்தனர்.

பெரிய பெண் சாந்தி பூஜையறையில் மறுநாள் வெள்ளிக்கிழமை பூஜைக்காகத் தயார்படுத்திக் கொண்டிருக்க, சாந்தியின் தங்கை தீபிகா டி.வி. முன் அமர்ந்து அழகுக் குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணின் அலங்காரத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

Continue reading “அழகுக்கு அழகு – சிறுகதை”