5+5 குறும்படம் விமர்சனம்

5+5 குறும்பட விமர்சனம்

5+5 குறும்படம் சமகாலச் சமூகத்தின் அவல நிலையை எடுத்துக்காட்டும் அற்புதமான‌ படம்.

புலனத்திலும் (வாட்சப்பிலும்) முகநூலிலும் எல்லோராலும் அதிகமாகப் பகிரப்பட்ட, பார்க்கப்பட்ட படம் இக்குறும்படம்.

ஆசிரியருக்கும் மாணவனுக்குமான இடைவெளி. ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் ஆன இடைவெளி. பெற்றோருக்கும் பள்ளிக்கும் ஆன இடைவெளி. பள்ளிக்கும் ஆசிரியருமான இடைவெளி. இத்தகைய‌ மிகப்பெரும் வெளியை, 3.45 நிமிடத்திற்குள் விளக்கி விட எத்தனிக்கிறது 5+5 குறும்படம்.

ஏதோ ஒரு விதத்தில், இந்தப் படத்தைப் பார்க்கிற அனைவரும் இதில் ஏதாவது ஒன்றில் அடிபட்டுச் சிதைந்து இருக்கலாம். அதன் வடுக்கள் ஆறாமல் நமக்குள் வலித்துக் கொண்டே இருக்கலாம். அதன் சாயல் தான் இப்படம்.

Continue reading “5+5 குறும்படம் விமர்சனம்”

நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்

நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்

நீயும் கற்கலாம் தமிழை என்று கலியன் சவுரி ராஜப் பெருமாளை அழைக்கிறார்.

கலியன் என்பது திருமங்கை ஆழ்வாரின் பெயராகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணபுர‌த்தில் உள்ள சவுரி ராஜப் பெருமாளை நீயும் கற்கலாம் தமிழை என்று அழைக்கிறார்.

Continue reading “நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்”

இணைய இதழ்கள் – ஓர் அறிமுகம் – பாரதிசந்திரன்

இணைய இதழ்கள் தமிழில் நிறைய உள்ளன. ஆனாலும் அவை நிறையப் பேருக்குத் தெரியாமல் உள்ளன. நாம் ஒவ்வொருவரும் ஐந்து அல்லது ஆறு இணைய இதழ்கள் பற்றி அறிந்து வைத்திருந்தாலே அதிகம்தான். நம்மைப் போன்றவர்களுக்கு, தமிழில் உள்ள இணைய இதழ்கள் பற்றி ஒரு நல்ல‌ அறிமுகம் கொடுக்கிறார் பாரதிசந்திரன்.

பாரதிசந்திரன் என்று இலக்கிய உலகில் புகழ் பெற்ற முனைவர் செ சு நா சந்திரசேகரன், இனிது இதழில் இணையம் அறிவோமா? என்ற தலைப்பில் வாரம் ஒரு தமிழ் இணைய இதழ் பற்றி எழுதிய தொடரின் கட்டுரைகள் இவை.

Continue reading “இணைய இதழ்கள் – ஓர் அறிமுகம் – பாரதிசந்திரன்”

கதை கதையாம் காரணமாம் – சிறுகதை

கதை கதையாம் காரணமாம்

பள்ளியில் ஆண்டு மலர் தயாரித்து வெளியிடப் போகிறார்களாம்.

மாணவர்களின் பங்கு அதில் நிறையவே இடம் பெற வேண்டும் என்றும், ஆண்டு மலருக்கான கதைகள், கட்டுரைகள், புதிர்கள், ஜோக்குகள் போன்றவற்றை மாணவர்கள் எழுதி சமர்ப்பிக்கலாம் என்றும் சுற்றறிக்கை வந்தது.

தன் எழுத்தாற்றலைக் காண்பிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கைகூடி வந்திருப்பது கண்டு சரவணனின் மனம் சிறகடித்துப் பறந்தது.

என்ன எழுதுவது? கதையா? கவிதையா? கட்டுரையா? ஜோக்கா? அல்லது புதிரா?.

Continue reading “கதை கதையாம் காரணமாம் – சிறுகதை”