போக்கிடம் தெரியாமல் போகட்டும் தீக்குணமே
முகையிடம் வண்டாக ஈர்க்கட்டும் நற்குணமே
தீக்கிரை யாகட்டும் தீராத தீவினைகள்
திக்கெட்டும் பரவட்டும் நீங்காத நல்வினைகள்
அரிதாரம் பூசாத ஆதவனும் பார்வையிட
அணையாத அடுப்பினிலே பொங்கட்டும் பொங்கலுமே
இணைய இதழ்
போக்கிடம் தெரியாமல் போகட்டும் தீக்குணமே
முகையிடம் வண்டாக ஈர்க்கட்டும் நற்குணமே
தீக்கிரை யாகட்டும் தீராத தீவினைகள்
திக்கெட்டும் பரவட்டும் நீங்காத நல்வினைகள்
அரிதாரம் பூசாத ஆதவனும் பார்வையிட
அணையாத அடுப்பினிலே பொங்கட்டும் பொங்கலுமே
தாயின் கருவில் தயாளரா யிருந்தோம்
வாயி லொன்பதும் வாய்க்கப் பெற்றோம்
கோயில் கருவறை இதுவென் றுணர்ந்தோம்
நோயில் படுக்கும் நொடியின் பொழுதிலே…
நெடுநாள் தொடரும் நெடுந்துயர் நீக்கி
நெடுந்தூரம் செல்லும் நதியினைப் போல
வெடுக்கென விடுத்து விடையும் கொடுக்க
இடுக்கண் களையும் தமிழே வருக!
Continue reading “இடுக்கண் களையும் தமிழே வருக – கவிதை”காற்றும் சற்றே ஓய்வினை யெடுத்தால்
கண்ணாடிப் பேழைக்குள் காட்சிப் பொருளே
ஒட்டுண்ணி வாழ்வினை வாழ்வ தறியாது
ஒட்டுற வின்றி வாழ்வது தகுமோ
ஒளியும் நீங்கினால் நிழலும் துணையில்லை
விழியும் நீங்கினால் வழியும் நிலையில்லை
பாதையின் படிமம் பாதத்தை நீங்கிடும்
கீதையில் படிந்த கீர்த்தனை விளங்கிடும்