தீர்வும் தீர்வற்றதுமாய்…

காந்தி சிலைக்கு அருகில்
மதுக்கடை திறந்தார்கள்
ஊரைக் கூட்டிப் போராடினோம்
காந்தி சிலையை அகற்றி விட்டார்கள் – தீர்வு

Continue reading “தீர்வும் தீர்வற்றதுமாய்…”

பாகற்காய் – சிறுகதை

சுவையான பாகற்காய் பொரியல்

தம் சொந்த தங்கையைவிட, நண்பர்களின் தங்கை மீது பாசம் வைப்பது, பாதுகாப்பு அரணாக இருப்பது, அதே போல் அந்த தங்கைகளும் பெரும் பாசமலராய் உருவெடுப்பது எல்லாம் ஒரு கவிதை போன்ற உணர்வு.

இப்படிதான் என் பள்ளி தோழன் பழனிவேலுவின் தங்கை மாலதி, எனக்கு கிடைத்த பாசமலர். இந்த பாசமலர் இப்போது புகுந்த வீட்டில் போய் வாடி வதங்குகிறது.

Continue reading “பாகற்காய் – சிறுகதை”

ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை

அடர்ந்த காடுகளும் மலைகளும் ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியுடன் கூடிய புறக்காவல் நிலையம் ஒன்றில்தான் ஒண்டி ஏட்டு பணிபுரிகிறார்,

மலையின் அடிவாரத்தில் உள்ள சில கிராமங்களுக்கும் சேர்த்துதான் இந்த காவல் நிலையம். ஒண்டி ஏட்டு இந்த கிராமங்களின் ஆதி அந்தத்தை அறிந்தவர்.

முக்கியமாக காடுகளில் பதுங்கி தீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் சொல்வதில் வல்லவர்.

Continue reading “ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை”

ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது – சிறுகதை

ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது - சிறுகதை

தேவி 96 கிலோ இருக்கிறாள். 30 வயதாகிறது. எந்த துணிக்கடையிலும் எந்த ரெடிமேட் துணியும் இவளுக்குப் பொருத்தமாய் கிடைப்பதில்லை.

ஒருநாள், நகரின் பெரிய ஜவுளி கடையில் நான்கு பக்கமும் கண்ணாடி கொண்ட ட்ரையல் ரூமில் தன் உருவத்தைப் பார்த்துத் தானே மிரண்டு விட்டாள்.

Continue reading “ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது – சிறுகதை”

செந்திலும் நானும் – சிறுகதை

செந்திலும் நானும் - சிறுகதை

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும் என்கிற இயற்பியல் கோட்பாட்டின்படி தான் எனக்கும் செந்திலுக்குமான பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது.

எனக்கு பேச்சே பிரதானம், செந்திலுக்கு மௌனமே மூலதனம்.

கடவுள், காதல், கவிதை, இலக்கியம், சினிமா என்று எல்லாமே எனக்கும் செந்திலுக்கும் நேர் எதிர் ரசனைகள்; வாழ்வியல் நடை முறைகள்.

Continue reading “செந்திலும் நானும் – சிறுகதை”