அணை உடைந்த கதை – க.வீரமணி

“ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் போன்ற தொழில் நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த யுகத்தில், யாரோ மாடு மேய்க்கிற பெண் சாமி வந்து ஆடி அருள் வாக்கு சொல்வதை நம்பிக் கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து உறுதியாகக் கட்டியுள்ள அணை உடைந்து விடும்; அதை தடுக்க வேண்டும் என்று ஒரு ஊரே திரண்டு வந்து மனு கொடுக்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?” என்று கலெக்டர் தலையில் அடித்துக் கொண்டார்.

Continue reading “அணை உடைந்த கதை – க.வீரமணி”

தீர்வும் தீர்வற்றதுமாய்…

காந்தி சிலைக்கு அருகில்
மதுக்கடை திறந்தார்கள்
ஊரைக் கூட்டிப் போராடினோம்
காந்தி சிலையை அகற்றி விட்டார்கள் – தீர்வு

Continue reading “தீர்வும் தீர்வற்றதுமாய்…”

பாகற்காய் – சிறுகதை

சுவையான பாகற்காய் பொரியல்

தம் சொந்த தங்கையைவிட, நண்பர்களின் தங்கை மீது பாசம் வைப்பது, பாதுகாப்பு அரணாக இருப்பது, அதே போல் அந்த தங்கைகளும் பெரும் பாசமலராய் உருவெடுப்பது எல்லாம் ஒரு கவிதை போன்ற உணர்வு.

இப்படிதான் என் பள்ளி தோழன் பழனிவேலுவின் தங்கை மாலதி, எனக்கு கிடைத்த பாசமலர். இந்த பாசமலர் இப்போது புகுந்த வீட்டில் போய் வாடி வதங்குகிறது.

Continue reading “பாகற்காய் – சிறுகதை”

ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை

அடர்ந்த காடுகளும் மலைகளும் ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியுடன் கூடிய புறக்காவல் நிலையம் ஒன்றில்தான் ஒண்டி ஏட்டு பணிபுரிகிறார்,

மலையின் அடிவாரத்தில் உள்ள சில கிராமங்களுக்கும் சேர்த்துதான் இந்த காவல் நிலையம். ஒண்டி ஏட்டு இந்த கிராமங்களின் ஆதி அந்தத்தை அறிந்தவர்.

முக்கியமாக காடுகளில் பதுங்கி தீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் சொல்வதில் வல்லவர்.

Continue reading “ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை”