அன்புக்குரியவளுக்கு – கதை

விடலைப் பருவத்தில் இருந்த இரண்டு அபலை மனங்களை ஒன்றிணைத்து மணம் முடித்தது காலம்.

இரண்டு இளம் உள்ளங்கள் பரிமாறிக் கொள்ளும் பாசைக்கு மொழிகள் தேவைப்படவில்லை.

ஊர் கூடி ஒன்றிணைத்து வைத்த இரு உள்ளங்கள் பரிமாறிக் கொண்ட பாசையில் கரு உருமாற்றம் பெற, உட்கொள்ளும் ஆகாரம் ஒவ்வாமையை தர, வாயில் உமிழ்நீர் சுரக்க, வயிற்றில் தவறி சென்ற பருக்ககைகள் வெளியே வர காத்திருக்க, குமட்டிய வாயை துடைத்துக் கொண்டு வந்தவளின் கண்ணில் பட்டது உரியில் இருந்த அடகாய் மாங்காய்.

Continue reading “அன்புக்குரியவளுக்கு – கதை”

சுகமான சுமை – கதை

செழியனுக்கு அன்று காலைப் பொழுது சீக்கிரமே புலர தொடங்கியது.

சுற்றுலா தளத்தின் அருகே இருப்பதனாலோ என்னவோ அன்று காலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. தன் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வெளியே கிளம்பினார் செழியன்.

Continue reading “சுகமான சுமை – கதை”

பாரிஜாதம் – கதை

கடலூர் மாவட்டம் ஓட்டிப் பகுதி அன்று இயற்கை சீற்றத்தினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.

இயற்கை சீற்றத்தினாலும் கடல் கொந்தளிப்பாலும் புயலின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத மரங்கள் சாய்ந்தன; கூரைகள் பட்டமாகப் பறந்தன.

Continue reading “பாரிஜாதம் – கதை”

பணமில்லா பரிவர்த்தனை – கதை

இரவு 8:30 மணி

வாசலில் “..அம்மா… அம்மா ….” என்று கூப்பிடும் சத்தம் கேட்டு மங்கலம் வெளியே வந்தாள்.

“இதோ வந்துட்டேன்பா. யாரு? அட! நம்ப பிச்ச கண்ணு. இந்த நேரத்துல வந்து இருக்கியேப்பா… வீட்டுல ஒன்னும் சமைக்கல. நாங்களே சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு டெலிவரி பாய தான் எதிர் பார்த்துகிட்டு இருக்கிறோம்.”

Continue reading “பணமில்லா பரிவர்த்தனை – கதை”

ஒரு பெண் நினைத்தால் – கதை

அன்றைய காரைக்கால் மிகவும் அமைதியாக இருக்கும்.

காத்தா பிள்ளை கோடியில் உள்ள முத்துப் பிள்ளை ரொட்டி கடையில் பக்கோடா என்றால் பேமஸ்.

அப்போதெல்லாம் பக்கோடாவை பேப்பர் சுத்தி பொட்டலமாக கொடுப்பார்கள். ஒரு பொட்டலம் 75 காசு.

ஒரு மாம்பழ வியாபாரி தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு 5 பொட்டலங்களை வாங்கி தன் பழ கூடையில் வைத்துவிட்டு சைக்கிளை தள்ளி கொண்டு நடந்தார்.

சிறிது தூரத்தில் பேருந்து நிலையத்தை ஒட்டியவாறு டைமண்ட் தியேட்டர் வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு எதிரே உள்ள கடைக்குள் சென்று பழ வியாபாரி திரும்பி வெளியே வந்தார்.

நீண்ட நாள் பழகிய நண்பர் கண்ணில் பட்டார்.

“அடடே வாங்க பாய், எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆகுது ஆளையே காணோம்.”

Continue reading “ஒரு பெண் நினைத்தால் – கதை”