நல்ல குடும்பம் – ஓர் பார்வை

நல்ல குடும்பம் நல்ல சமுதாயத்திற்கு அடிப்படை.

துறவறம் மற்றும் இல்லறம் என்பது இரு வாழ்க்கை முறைகள். ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்று கிடையாது.

உண்மையைச் சொல்வதென்றால் நிறையப் பேருக்கு உகந்தது இல்லறம்தான். இனிய இல்லறம் இந்த பூமியைச் சொர்க்கமாக மாற்றும்.

Continue reading “நல்ல குடும்பம் – ஓர் பார்வை”

கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை

இரண்டு நாட்களாகவே ராதாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தான் ரவி.

இனம் புரியாதோர் சோகம் அவள் முகத்தில் குடி கொண்டிருந்தது. சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து அவள் மறுகிக் கொண்டிருப்பதாகவே பட்டது ரவிக்கு.

இரண்டு நாட்களுமே இரவில் அந்த அந்தரங்க இனிமையான வேளையிலே இதமாக அவள் கூந்தலை வருடியவாறே கேட்டுப் பார்த்தான் ரவி.

Continue reading “கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை”

இருமனம் திருமணம் – சிறுகதை

இந்து திருமணம்

“என்னங்க….” கலக்கத்துடன் கணவனை அழைத்தாள் கீதா.

ஏறக்குறைய. அதேநிலையில் இருந்த குமார் மனைவியின் அழைப்பால் திரும்பினான்.

“என்ன கீதா?”

“எனக்கு ரொம்ப பயமாயிருக்குங்க. நம்ம ரிப்போர்ட் எப்படி இருக்குமோ?”

“பயப்படாதே. நம்பிக்கையோட இருப்போம். நல்லதே நடக்கும்.”

Continue reading “இருமனம் திருமணம் – சிறுகதை”

ஆலங்கட்டி – சிறுகதை

அதிகாலை 3 மணி.

“நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது; இந்த வீட்டுக்கு நல்ல காலம் பொறக்குது.

இத்தனை காலம் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் விடிவு காலம் வரப்போகுது. ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா.

இந்த வீட்டம்மா மனசுல நினைச்சதெல்லாம் நடக்க போகுது.
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது.”

சத்தம் கேட்டு எழுந்தாள் மாலதி.

Continue reading “ஆலங்கட்டி – சிறுகதை”

சிந்தித்து செயல்படுவோம்!

பெரும்பாலும் தற்போதுதான் அதிகம் பேர் ஜாதகம், நாள், நட்சத்திரம், சூலம், கிழமை முதலியவற்றை பார்த்து வெளியூர் செல்கிறார்கள்; திருமணம் செய்கிறார்கள்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் யாரும் ஜாதகம் பார்த்தது கிடையாது.

Continue reading “சிந்தித்து செயல்படுவோம்!”