தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய கோதை தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் ஒன்பதாவது பாசுரம் ஆகும்.
இந்த உலகில் உள்ள இன்பங்கள் எல்லாம் நிலையானவை என்று எண்ணி உலக மக்கள் அதில் மூழ்கி இருக்கின்றனர். அவை நிலையானவை அல்ல. திருமாலே நிலையானவர்.
ஆதலால் இறைவனைப் போற்றிப் பாடி, நிலையான இன்பத்தைப் பெற வாருங்கள் என்று இப்பாசுரம் அழைக்கிறது.