தினம்தினம் தண்ணீர் தினம்

தினம்தினம் தண்ணீர் தினம்

கண் இமைக்காமல்

பார்க்க வைக்கும் கடலே

அழகாய் வீழும் அருவிகளே

நளினமாய் ஓடும் நதிகளே

ஏறிட்டுப் பார்க்க வைக்கும் ஏரிகளே

குனிந்து பார்க்க வைக்கும் குளங்களே

கீழே பார்க்க வைக்கும் கிணறுகளே

அண்ணாந்து பார்க்க வைக்கும் மழை மேகங்களே

இவையனைத்தும் நீ தானே

இவையனைத்தும் நீ தானே

Continue reading “தினம்தினம் தண்ணீர் தினம்”

உயர்வு தாழ்வு உண்ணப்படுகிறது

உயர்வு தாழ்வு உண்ணப்படுகிறது

உங்கள் தேடலை நிறுத்துகிறபோது

உயர்வு தாழ்வு உண்ணப்படுகிறது

பல்பை கண்டுபிடித்த எடிசனுக்கு

இருளைத் தவிர

வெற்றி வேறொன்றும் இல்லை

Continue reading “உயர்வு தாழ்வு உண்ணப்படுகிறது”

மனநலம் – கவிதை

மனநலம்

மனநல வல்லுனர்களும் மனிதர்களே

மனநல மருத்துவர்களும் மனிதர்களே

மனநலம் பாதிக்கப்பட்டவனும் மனிதனே

மற்றவரின் மனநலம் கலங்கடிப்பவனும் மனிதனே

Continue reading “மனநலம் – கவிதை”

அந்தரத்தில் ஓராயிரம் உயிர்கள் – ஹைக்கூ கவிதைகள்

எழுத்தாளர்களின் சரணாலயத்தை

கரையான்கள் அரிக்கின்றன

நூலகத்திலுள்ள புத்தகங்கள்

Continue reading “அந்தரத்தில் ஓராயிரம் உயிர்கள் – ஹைக்கூ கவிதைகள்”

ராஜாவும் வயிறும் – சிறுகதை

ராஜாவும் வயிறும்

அவன் டைரியின் பக்கங்களை வாசித்துக் கொண்டேயிருக்கிறேன்.

முடிந்தால் நீங்களும் என் அருகில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்; வாய்விட்டு வாசிக்கிறேன்; அவன் வலிகளை கேட்டுக் கொள்ளுங்கள்!

இனி இயற்கையை சுவாசிக்க முடியாது என்கிற ‘சந்தேக சந்தர்ப்பம்’ ஏற்படுகிறபோது, எந்த வகையில் இயற்கை கொடுத்த வாழ்வை நேசிக்கலாம் என்கிற வினாவினை, ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் வேள்வியாக்கிக் கேள்வியாகக் கேட்கிறது அவன் மனம்.

அந்த ஒவ்வொரு நொடியும் உன்னதமாகப்படுகிறது அவனுக்கு. வாழ்க்கை அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது.

உலகம் பரந்து விரிந்த தேடல் நிறைந்த அதிசயமாகத் தெரிகிறது.

மனம் கவிஞனாகி கவி பாடுகிறது.

ஆனால் அந்த ஒவ்வொரு நொடியும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியாவது மீண்டு விட வேண்டும். இன்னும் கொஞ்ச காலம் இயற்கையில் இணைந்து இயல்பாக வாழ்ந்துவிட வேண்டும் எனும் வைராக்கியத்தோடு மருத்துவமனைக்கு புறப்பட்டான்.

Continue reading “ராஜாவும் வயிறும் – சிறுகதை”