அவன் டைரியின் பக்கங்களை வாசித்துக் கொண்டேயிருக்கிறேன்.
முடிந்தால் நீங்களும் என் அருகில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்; வாய்விட்டு வாசிக்கிறேன்; அவன் வலிகளை கேட்டுக் கொள்ளுங்கள்!
இனி இயற்கையை சுவாசிக்க முடியாது என்கிற ‘சந்தேக சந்தர்ப்பம்’ ஏற்படுகிறபோது, எந்த வகையில் இயற்கை கொடுத்த வாழ்வை நேசிக்கலாம் என்கிற வினாவினை, ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் வேள்வியாக்கிக் கேள்வியாகக் கேட்கிறது அவன் மனம்.
அந்த ஒவ்வொரு நொடியும் உன்னதமாகப்படுகிறது அவனுக்கு. வாழ்க்கை அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது.
உலகம் பரந்து விரிந்த தேடல் நிறைந்த அதிசயமாகத் தெரிகிறது.
மனம் கவிஞனாகி கவி பாடுகிறது.
ஆனால் அந்த ஒவ்வொரு நொடியும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியாவது மீண்டு விட வேண்டும். இன்னும் கொஞ்ச காலம் இயற்கையில் இணைந்து இயல்பாக வாழ்ந்துவிட வேண்டும் எனும் வைராக்கியத்தோடு மருத்துவமனைக்கு புறப்பட்டான்.
(மேலும்…)