நீருடன் ஓர் உரையாடல் 8 – கடின நீர்

கடின நீர்

அம்மா சொன்ன மளிகைப் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

கதவை திறந்து உள்ளே நுழைந்தேன். கையிலிருந்த மளிகைப் பொருட்களை நிர‌ம்பிய பையை வாசற்படியருகே வைத்துவிட்டு, இடது புறம் இருந்த குழாய் அருகில் சென்றேன்.

கைகளை சோப்பு போட்டு நன்றாக சில நிமிடங்கள் தேய்த்துக் கொண்டு பின்னர் குழாய் நீரில் கழுவினேன்.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 8 – கடின நீர்”

நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்

படிக நீர்

மதிய நேரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ‘மோர் குடித்தால் இதமாக இருக்கும்’ என்று மனதில் தோன்றியது.

சமையலறைக்குச் சென்றேன்.

சமையலறை மேடையிலிருந்த ஒரு கிண்ணத்தில் தயிர் இருந்தது. ‘மோர் குடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் இன்னும் மேலெழுந்தது.

உடனே, கலவைக்கருவி (மிக்சி) ஜாடியை எடுத்து அதில் தயிரை இட்டு, அத்தோடு சிறிதளவு நீரை சேர்த்து கலவைக்கருவியில் வைத்து இயக்கினேன். சில நொடிகளில் மோர் தயார் ஆனது.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்”

நீருடன் ஓர் உரையாடல் 6 – நீரின் உறைதிறன்

நீரின் உறைதிறன்

ஒரு ஆய்வகத்தினுள் நுழைந்து சென்று கொண்டிருந்தேன். இறுதியில் ஒரு விஸ்தாரமான ஆய்வக அறை இருந்தது. அங்கிருந்த ஒரு ஆராய்ச்சியாளர் என்னை இன்முகத்துடன் வரவேற்றார்.

நானும் இன்முகத்துடன் அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதனை அடுத்து ஒரு மேசையில் இருந்த கருவியை அவர் எனக்கு காண்பித்தார். ஆர்வமுடன் அதனை நான் பார்த்தேன். அந்தக் கருவி ஏதோ ஒரு பெட்டி மாதிரித்தான் இருந்தது.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 6 – நீரின் உறைதிறன்”

நீருடன் ஓர் உரையாடல் 5 – கொதிநீராவி

கொதிநீராவி

அன்று நான் மட்டும் தான் வீட்டில் இருந்தேன். ‘காலை சிற்றுண்டியாக என்ன சமைக்கலாம்?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.

நேற்று, அம்மாவும் அப்பாவும், அக்கா வீட்டிற்கு புறப்படும் முன், “பிரிட்ஜில இட்லி மாவு இருக்கு, காலைல தோசை ஊத்திக்கோ” என்று அம்மா கூறியது நினைவிற்கு வந்தது.

உடனே குளிர்சாதன பெட்டியை திறந்தேன். காய்கறிகளும், மூன்று பாத்திரங்களும் மூடிய நிலையில் இருந்தன. முன்னதாக தெரிந்த ஒரு குண்டாவை திறந்து பார்த்தேன். அதில் மாவு இருந்தது. அதை வெளியே எடுத்து வைத்தேன்.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 5 – கொதிநீராவி”

நீருடன் ஓர் உரையாடல் 4 – ஈரப்பதம்

நீருடன் ஓர் உரையாடல் 4 - ஈரப்பதம்

காலை நான்கு மணி இருக்கும். விழித்துக் கொண்டேன். எழுந்து சென்று நீரால் முகத்தைக் கழுவினேன். நீர் சில்லிட்டது. எனது தூக்கம் முற்றிலும் நீங்கியது.

சில நொடிகள் வீட்டிற்குள் நடந்தேன். பின்னர் வாசற்கதவை திறந்து வெளியே வந்தேன். வெளிச்சம் இல்லை. செயற்கை ஒலிகளும் கேட்கவில்லை.

இரவின் அமைதி எங்கும் ஆட்கொண்டிருந்தது. எனினும் பலவித பறவைகளின் ஒலிகளை அவ்வப்பொழுது கேட்க முடிந்தது. பறவைகளின் ஒலிகள் என்னை கவர்ந்தன‌.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 4 – ஈரப்பதம்”