கொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா?

கொசு கடிக்காதேகொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா?

கொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா? என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் உள்ளது. அதற்கான விடை இங்கே கொடுக்கப்பட்டுள்ள, இரண்டு அறிவியல் அறிஞர்களின் உரையாடல் மூலம் நமக்குக் கிடைக்கின்றது.

 

“என்ன வேதிவாசன் சார், கொசு கடிக்குதா?”

(தனது வலது கையால் இடப்பக்க தோள்பட்டை பகுதியில் கடித்த கொசுவை அடித்த படியே)  “ஆமாங்க…. கணிதநேசன் சார்! கொசு நல்லா கடிக்குது!”

“கொசுவுக்கு எப்படி தான் தெரியிதோ? தெரியல! மனுச‌ங்கள தேடி கண்டுபிடிச்சு இப்படி கடிக்குதே!”

Continue reading “கொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா?”

கத்தரித் துண்டுகள் பழுப்பாக மாறுவது ஏன்?

கத்தரித் துண்டுகள் பழுப்பாக மாறுவது ஏன்

பள்ளி முடிந்தது. வழக்கம் போல் கணிதநேசனும் வேதிவாசனும், ஒன்றாக புறப்பட்டு, கணிதநேசனுடைய இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர்.

வாகன இருக்கையை கையால் இரண்டு தட்டுதட்டி, அதிலிருந்த தூசிகளை நீக்கியபின், வாகனத்தை இயக்குவதற்கு தயாரானார் கணிதநேசன்.

ஆசைமுகம் மறந்துப் போச்சே…. என்ற பாரதியார் பாடல் அழைப்போசை ஒலிக்கத் தொடங்கியது, வேதிவாசனின் கூர்திறன் பேசியிலிருந்து…. Continue reading “கத்தரித் துண்டுகள் பழுப்பாக மாறுவது ஏன்?”

மலர்களை கொல்லும் மலர் – அறிவியல் குறுங்கதை

மலர்களைக் கொல்லும் மலர்

மலர்களை கொல்லும் மலர் என்னும் இக்கதை பூக்களே பூக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன என்பதை விளக்குகிறது.

அது மதிய நேரம். எட்டாம் வகுப்பில் தாவர உலகம் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் வேதிவாசன்.

வகுப்பு நேரம் முடிந்து உணவு இடைவேளை தொடங்கியதை பள்ளி மணியோசை மூலம் தெரிந்து கொண்டார். Continue reading “மலர்களை கொல்லும் மலர் – அறிவியல் குறுங்கதை”

மருதாணி சிவப்பு – அறிவியல் குறுங்கதை

மருதாணி சிவப்பு

மருதாணி சிவப்பு ஒரு நல்ல அறிவியல் குறுங்கதை.

“வேதி, தூற‌ (மழை) போடுது. மாடியில காய போட்ட துணியெல்லாம் எடுத்துக்கிட்டு வரியா?” என்றார் அம்மா.

“சரிமா” என்றபடி தனது அறையிலிருந்து இரண்டாவது தள மொட்டை மாடிக்கு விரைந்தார் வேதிவாசன்.

மழை வேகமெடுக்கத் தொடங்கியது. Continue reading “மருதாணி சிவப்பு – அறிவியல் குறுங்கதை”

வைரஸால் பயன் உண்டா? – அறிவியல் குறுங்கதை

வைரஸால் பயன் உண்டா?

கடந்த மூன்று தினங்களாக தொடர் பணிகளில் மூழ்கியிருந்தார் வேதிவாசன். இதனால், தனக்கு வந்த மின்னஞ்சல்களை அவரால் பார்க்க இயலவில்லை.

அன்று இரவு நேரம் கிடைக்கவே, தனது மின்னஞ்சல் முகவரியைத் திறந்தார். சரியாக நாற்பத்தி ஏழு மின்னஞ்சல்கள் இன்பாக்சில் வந்திருந்தன.

மூன்றுநாட்களில் இத்தனை மெயிலா? (மின்னஞ்சல்) என்று எண்ணியவாரே, ஒவ்வொரு மின்னஞ்சலாக பார்த்து கொண்டு வந்தார்.

அவற்றுள் சில சர்வதேச ஆய்விதழ்களில் அண்மையில் வெளி வந்திருந்த ஆராய்ச்சி கட்டுரைகள் பற்றின செய்திகளாக‌ இருந்தன. Continue reading “வைரஸால் பயன் உண்டா? – அறிவியல் குறுங்கதை”