ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்ற பாடல் பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியான ஆண்டாள் அருளிய கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் மூன்றாவது பாசுரம் ஆகும்.
நாட்டு மக்கள் நீங்காத செல்வம் பெற்று வளமாக வாழ வாழ்த்துக் கூறும் பாடல் இது.
நீங்காத செல்வத்தை நிறைவாகப் பெற இப்பாடல் மங்கல நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது.