ரத்தன் டாடாவின் வரிகள்

ரத்தன் டாடாவின் வரிகள்

ரத்தன் டாடாவின் வரிகள் எளியவை; இனியவை.

ரத்தன் நோவல் டாடா இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்.

அவர் இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து சில நல்ல வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பயன் பெறுங்கள்.

 

உங்கள் குழந்தைகளை பணக்காரனாக இருக்க வேண்டும் என்று கூறாமல், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறி வளருங்கள்.

அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையில், ஒரு பொருளின் விலையைப் பார்க்காமல், அதனுடைய மதிப்பினை உணர்வார்கள். Continue reading “ரத்தன் டாடாவின் வரிகள்”

அறிவு உயிர் காக்கும் – சிறுகதை

நரி

அறிவு உயிர் காக்கும் என்பது ஒரு நல்ல‌ சிறுகதை. நாம் கஷ்டமான சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கதை.

பூங்காவனம் என்ற காட்டிற்கு ராஜாவாக சிங்கம் ஒன்று இருந்தது. அது தனக்கு ஆலோசனை சொல்வதற்கு மூன்று மந்திரிகளை நியமிக்க எண்ணியது.

அதன்படி கரடி, குரங்கு, நரி ஆகியோரை மந்திரிகளாக நியமித்தது. Continue reading “அறிவு உயிர் காக்கும் – சிறுகதை”

மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்

மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்

நம்மில் பலர் நாம் வகிக்கும் பதவியினால் நமக்கு பெருமை என்று எண்ணுகிறோம். பதவியால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம், அது எல்லாவற்றையும் வழங்கி விடும் என்று தவறாகக் கருதுகிறோம்.

அவ்வாறு சுயாங்கோ என்பவர் மேயர் பதவியில் இருந்தபோது, துறவி ஒருவரைக் காணச் சென்றார். அப்போது நிகழ்ந்தவற்றை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்”