கூகுள் பே – தனிக் கவிதைகள்

கண்ணாடி

நம் பிம்பத்தை பிரதிபலிக்கும்
கண்ணாடி – இவ்வுலகில் சிருஷ்டிக்கப்
படவில்லையெனில் நாம் தன்னலமற்று
வாழ்ந்திருப்போமோ என்று ஒரு சிந்தனை

Continue reading “கூகுள் பே – தனிக் கவிதைகள்”

உற்று நோக்கு – படிப்பது எப்படி? – பாகம் 8

உற்று நோக்கு

உற்று நோக்கு. அஃது உயர்வுக்கு உறுதுணை.

எந்த ஒரு செயலையும் மேம்போக்காகச் செய்யாமல் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்தால், அது மிகப்பெரிய பலன்களை நமக்குக் கொடுக்கும் என்பது குறித்து சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உற்றுக் கவனித்தால் அது நமக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கும். அதற்கு இதோ இரண்டு அருமையான நிகழ்ச்சிகள்.

Continue reading “உற்று நோக்கு – படிப்பது எப்படி? – பாகம் 8”

வீரர்கள் தியாகம் – கவிதை

சமத்துவம் குடிகொண்டு

பொதுவுடைமை நிலை நின்று

சகோதரத்துவம் கை கோர்த்து

எள்ளளவும் தன்னலமின்றி

குதூகலிக்கும் குழந்தை உள்ளம்

இராணுவ வீரர் உள்ளம்

Continue reading “வீரர்கள் தியாகம் – கவிதை”

அழகான தீர்வு – சிறுகதை

அழகான தீர்வு - சிறுகதை

அன்று தொலைக்காட்சியில் கண்ட செய்தி மாணிக்கத்திற்கு பேரதிர்ச்சியைத் தந்தது. பள்ளியில் படிக்கின்ற மாணவிக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை என்ற செய்திதான் அது.

அவரின் ஒரே மகள் மதியழகி பனிரெண்டாம் வகுப்பு படிக்கின்றாள். மனம் கலங்கியது மாணிக்கத்திற்கு.

“அப்பா நான் பள்ளிக்கூடம் போய்ட்டு வரேன்ப்பா” என்று துள்ளித் துள்ளி மகிழ்ச்சியாக சென்றாள் மதியழகி.

அன்றைய தினம் அம்மாவட்ட காவல்துறை பெண் அதிகாரி வருகை புரிந்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள் பற்றி விரிவாக விளக்கினார்.

Continue reading “அழகான தீர்வு – சிறுகதை”

யாரின் பிழை – கவிதை

இதமான சூழ்நிலை இருண்ட சூழ்நிலையாகி

வளமான தேசம் வறண்ட தேசமாகி

உழவர்க‌ள் வயலில் உழுத காலம் போய்

நோயின் பிடியில் விழுந்த காலம் வந்து

Continue reading “யாரின் பிழை – கவிதை”