காளையடக்கி வீரம் காட்ட நேரம் வந்துருச்சு – இந்த
கன்னிப் பொன்னு வரைஞ்சகோலம் மனசில் நெறைஞ்சிருக்கு
வாலைக்குமரிக வைக்கும் பொங்கல் வாசனை பார்த்து – அதை
வாங்கிப்போக வாசப்பூக்கள் வந்து நின்னுருக்கு
ஓலைக்குள்ள ஒளிஞ்சிருந்த கிழங்கு வந்துருச்சு – அதை
உரிச்சு எடுத்து அவிச்சுதின்ன மனசில் துடிப்பிருக்கு
பாலைப்போல பளிங்குநிறத்தில் வீடும் ஆயிருச்சு – அந்த
பக்கத்துல கரும்புமஞ்சளும் காதல் பேசி நிக்கி
உழைச்ச சனங்க ஒன்று சேர்ந்து கூடி நின்னுருச்சு – அங்க
உருகும் சூரியன் ஒளியில் மனசு உருகி நின்னுருச்சு
ஏழையாக இருப்பதெல்லாம் மறந்துபோயிருச்சு – இங்க
எல்லோருக்கும் பொங்கல்நாளு ஒன்னுன்னு ஆயிருச்சு
மாலைப் பொழுது மக்கள் கூட்டம் ஓடிவந்துருச்சு – அந்த
மந்தையோரம் உறியடிக்கும் அழகை ரசிப்பதற்கு
நாளைவிடியும் பொழுதும் நமக்கு நன்மை செய்வதற்கு – இந்த
நாளின் இன்பம் நல்லதமிழ் போல் நெஞ்சில் நிறைஞ்சிருக்கு
இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!