ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்

காந்தி மகான் விரும்பியது சாந்திதான் – அவர்

கால்நடையாய் போனதெல்லாம் வேண்டிதான்

அமைதியை வேண்டிதான்

ஏந்தி நின்ற ஆயுதமோ அன்புதான் – அவரை

எப்போதும் வென்றதில்லை கோபம்தான்

எதன் வழியும் கோபம்தான்

அந்திவெயில் தரும் நிறமோ மஞ்சள் தான் – நம்

அண்ணலவர் கொள்கையது பொறுமைதான்

எப்போதும் பொறுமைதான்

அந்நியரின் அடக்குமுறை எதிர்த்துதான் – அவர்

தொடர்ந்து விட்ட அம்புகளோ அகிம்சை தான்

உயர்ந்த அகிம்சைதான்

எந்நிறமும் எம்மதமும் ஒன்றுதான் – அவர்

எண்ணத்திலே உணர்ந்த பொருள் ஒருமைதான்

என்றும் தேச ஒருமைதான்

பண்ணிசைத்துப் பாடிடுவோம் பெருமைதான் – அவரின் பெருமைதான்

பார்முழுதும் ஒன்று கூடும் பொழுதுதான்

(காந்தியை) வாழ்த்தும் பொழுதுதான்

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.