கிராமியக் காதல் பாடல்

ஆண் :ஆளக்கொல்லும் ஆலகாலம்
    கண்ணில் வச்சவளோ -இந்த
    அத்தானையே நெஞ்சுக்குள்ள
    அடச்சி தைச்சவளோ !

ஆண் :கரும்பு போல இனிக்கும்சுவை
    கொடுக்க வந்தவளோ- கை
    தொடுத்தமாலை எடுத்துசாத்த
    காத்து நின்னவளோ !

ஆண் :ஆலம்பூவு சீலை கட்டி
    அளந்து நடக்குற- என்
    ஆறடியும் அனல் உடுத்த
    அகவல் படிக்கிற !

ஆண் :கஞ்சிகலையம் சுமக்கும் பெண்ணா
    கச்சிதமாய் இருக்க- என்னை
    கட்டி அணைச்சி ஒண்ணு கொடுத்தா
    சூடு தணிந்திருப்பேன் !

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250

கவிஞர் கவியரசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.