மலரட்டும் மார்கழி!

பனி தூவும்
பணி செய்யும்
வெண் மகள்
நன்மார்கழி !

நோன்புகள் இருக்க
மாண்புகள் வளர்க்கும்
குளிர் மங்கை
துளிர் மார்கழி !

வாசலின் கோலத்தில்
பூசணைப் பூக்கள்
பாக்களும் பஜனையும்
ஆக்கிடும் மார்கழி !

மாதம் முழுக்கவே
வேதங்கள் ஒலிக்கும்
மா தவம் என்றொரு
மாதமே மார்கழி !

வானவரை வசமாக்கும்
மாணிக்கவாசகரின்
திருவெம்பாவை பாட
வரும் மகளே மார்கழி !

சூடிக்கொடுத்த
சுடர்க்கொடி ஆண்டாள்
பாடிக்களித்த -திருப்
பாவையே மார்கழி !

பொய்கள் உரைக்காத
தை மகளின் தூதாய்
மெய்யென மலர்ந்தாள்
நெய்வாச மார்கழி !

வன்மத்தை ஒழித்துக் காட்டி
தொன்மத்தை நிலை நிறுத்தி
நாடெங்கும் நலம்கொழிக்க
பீடுடைய மார்கழியே வா ..!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250


கவிஞர் கவியரசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.