வாட்ஸ் ஆப் செய்த நன்மை என்ற இக்கதை, நவீன தொழில் நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினால், அளவிட முடியாத நன்மைகளைப் பெறலாம் என்பதை உணர்த்துகின்றது.
அன்றைக்கு அலுவலகத்தில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென கைபேசி அழைத்தது.
கைபேசியை எடுத்துப் பார்த்தால், தெரியாத எண் ஒளிர்ந்தது. யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, கைபேசியை எடுத்தான் கதிர்.