சூது கொடியது; மிகவும் கொடியது! – வ.முனீஸ்வரன்

சூது

சூது கொடியது; மிகவும் கொடியது!

ஆம். மனிதன் நாகரிகம் அடைந்து, நிலையாக ஓரிடத்தில் தங்க ஆரம்பித்து, பொழுதுபோக்கிற்கு என்று நேரம் கிடைத்த காலம் முதல் இன்றைக்கு வரையிலும் சூது மிகக்கொடுமையான விளைவுகளையே கொடுத்து வருகிறது.

அன்றே அவ்வைப்பாட்டி கொன்றை வேந்தனில் ‘சூதும் வாதும் வேதனை செய்யும்’ என்று பாடி வைத்துள்ளார்.

நமது புராணங்களிலும்கூட சூதாட்டத்தால் கெட்டவர்கள் என்று மூவரைக் குறிப்பிடுகின்றனர்.

Continue reading “சூது கொடியது; மிகவும் கொடியது! – வ.முனீஸ்வரன்”

சேர்மக்கனி – பொது வாழ்வின் இலக்கணம்!

பூலாஊரணி காளியம்மன் கோவில்

சேர்மக்கனி அவர்கள் பூலாஊரணி என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்தாலும், பொதுவாழ்வில் தலைமைப் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.

தன்னுடைய நலனுக்காக இல்லாமல் பிறருடைய நலனுக்காக உழைப்பவர்கள் இருப்பதனாலேதான், இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தக் கருத்திற்கு முற்றிலும் பொருத்தமாக, பொது வாழ்வில் மற்றவர்களுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர், த.சேர்மக்கனி அவர்கள்.

சேர்மக்கனி எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. அவர் எந்த அரசு பதவியையும் வகித்தவர் அல்ல.

நேரடி அரசியலில் ஈடுபடாமலும் பொது வாழ்வில் ஈடுபடலாம் என எனக்கு வழிகாட்டியவர் அவர்தான்.

அவருடைய வாழ்வும் செய்தியும் சொல்லும் சுருக்கமான கட்டுரை இது.

Continue reading “சேர்மக்கனி – பொது வாழ்வின் இலக்கணம்!”

என் வாழ்க்கை என் பாடம் – காந்தி

காந்தி

எந்த எரிநட்சத்திரமும் வழிகாட்டவில்லை; எந்தத் தீர்க்கத்தரிசியும் முன்னறிவிப்பைச் செய்யவில்லை. கோடான கோடி குழந்தைகள் மண்ணில் பிறப்பெடுப்பதைப் போன்றே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் பிறந்தார்.

பின்னர், எல்லாரைப் போன்றில்லாமல் மகாத்மா காந்தியாக அவர் பரிணாமம் பெற்றதென்பது ‘உண்மை’ என்னும் ஒற்றைப் புள்ளியில் தன் வாழ்க்கைப் படகைச் செலுத்தியதால்தான்.

Continue reading “என் வாழ்க்கை என் பாடம் – காந்தி”

காமராஜர் நினைவு தினம் – க.வடிவேலு

காமராசர்

அறிவை விரிவாக்க அரியாசனத்தில் அமர்ந்தவரே

அறியாச் சிறுவருக்கு அற்புதம் செய்தவரே

செறிவாய்க் கல்வியினை நிறைவாய்த் தந்தவரே

அறிவின் ஆதியை அகத்தினில் விதைத்தவரே

Continue reading “காமராஜர் நினைவு தினம் – க.வடிவேலு”

கடைசி வார்த்தைகள்! – ஜானகி எஸ்.ராஜ்

காந்தி

என்றைக்காவது ஓர் நாள் நாம் அனைவருமே மரணப் படுக்கையில் துயில் கொள்வது நிஜம்!

உயிர் நம் உடலை விட்டுப் பிரியும் முன், சிலர் மௌனமாகக் கண்களை மூடலாம். இன்னும் சிலரோ அருகிலிருப்பவர்களிடம் ஏதோ சொல்லி விட்டுக் கண்களை மூடலாம். மேலும் சிலர் படைத்த இறைவனை நினைத்து அவனது நாமத்தை உச்சரிக்கலாம்.

Continue reading “கடைசி வார்த்தைகள்! – ஜானகி எஸ்.ராஜ்”