அன்றோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. எனவே, ஆசிரியர்கள் நிதானமாக அவர்களுக்குள் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.
இன்னும் இரண்டு வாரகாலம் விடுமுறை இருந்ததால், அந்நாட்களது அலுவல்கள் குறித்தான கலந்துரையாடலாகவே அது அமைந்திருந்தது.
சிலர், உறவினர்கள் வீட்டுக்குச் செல்வது குறித்தும், சிலர் சுற்றுலாத் தளங்களுக்கு செல்வது குறித்ததுமான பேச்சுக்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
சில நண்பர்கள் அன்று இரவே தங்களது சொந்த ஊருக்கு பயணப்பட வேண்டியிருந்ததால், அவர்கள் விரைவாக அங்கிருந்து விடைபெற்றனர். Continue reading “குப்பை நாற்றம் – அறிவியல் குறுங்கதை”