சுமை தாங்கி – சிறுகதை

“வசந்தா… வசந்தா … என்ன பண்ணிக்கிட்டு இருக்க?

சீக்கிரம் வா. ஆபீசுக்கு நேரமாச்சு.” என்றான் கேசவன்.

“ச்…இதோ வந்துட்டேங்க. காலையில எந்திரிச்சா உங்க அம்மா அப்பாவுக்கு பணிவிடை செய்யணும். புள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு கிளப்பணும். இதுக்கே எனக்கு நேரம் சரியா இருக்கு. இதுல நீங்க வேற காலில சுடுதண்ணியை ஊத்திக்கிட்டு நிக்கிறீங்க…” என்று கடுகடுத்தாள் வசந்தா.

Continue reading “சுமை தாங்கி – சிறுகதை”

ஒரு ஜோடி ஷூக்கள் – சிறுகதை

ஒரு ஜோடி ஷூக்கள் - சிறுகதை

காரிருளைக் கிழித்துக் கொண்டு ஹெளரா பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ஒரே சீராக சென்று கொண்டிருந்தது.

சோம்பல் முறித்து தலைநிமிர்ந்த போதுதான் அம்முதியவரைப் பார்த்தேன். எங்கள் இருவரைத் தவிர வேறு எவரும் அப்பெட்டியில் இல்லை.

அந்த முதியவருக்கு எழுவது வயது இருக்கும். பார்ப்பவர்கள் முகத்தைச் சுளிக்கும் அளவுக்கு அழுக்கு படிந்த சட்டையும், ‘தொள தொள’ பாண்ட் கசங்கிய நிலையிலும் அணிந்திருந்தார்.

Continue reading “ஒரு ஜோடி ஷூக்கள் – சிறுகதை”

ஒருநாள் பாடம் – சிறுகதை

ஞாயிற்றுக்கிழமை தந்த சுகத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் மாதவி.

அழைப்பு மணி சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தாள். கடிகாரத்தை பார்த்தபோது மணி பத்தாகியிருந்தது. வீறிட்ட கொட்டாவியை கையால் சொடக்கு விட்டு அடக்கியபடி எழுந்தாள்.

கதவை திறந்து பார்த்தபோது யாரும் தென்படவில்லை. தரையில் யாரோ விசிறிப் போட்ட விளம்பர இதழ் ஒன்று கிடந்தது.

“சே, நல்ல தூக்கத்தை கெடுத்து விட்டான்” முணுமுணுத்தவாறு கதவை அறைந்து சாத்தினாள்.

Continue reading “ஒருநாள் பாடம் – சிறுகதை”

ஸ்கூட்டியில் வந்த தெய்வம் – சிறுகதை

நாகை நகரத்திலிருந்து பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் வாடிய மலரை போல் முகம் வாடி இருக்க, பின்னலிடாத தலையும், வண்ணம் தீட்டாத முகமும், திருத்தப்படாத புருவமும் வரையப்படாத கண்களில் கண்ணீர் வழிய, சிரிப்பை மறந்த முகத்துடன் ஒளி மங்கிய நிலவாய் அமர்ந்திருந்தாள் மாலதி.

கலங்கிய கண்களை புடவை தலைப்பில் ஒற்றி எடுத்துக் கொண்டிருக்கையில், தன்னருகில் வந்த கண்டக்டரைக்கூட கவனிக்காமல் அமர்ந்திருந்தாள்.

Continue reading “ஸ்கூட்டியில் வந்த தெய்வம் – சிறுகதை”

மூலதனம் – சிறுகதை

அன்று வெள்ளிக் கிழமை. அந்த பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மிகவும் சக்தி வாய்ந்த பிள்ளையார் என்றும், எப்படிப்பட்ட வேண்டுதல்களும் விரைவில் நிறைவேற்றி விடுவதாகவும் மக்கள் பேசிக் கொள்வதை தினம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் கணேசன் குருக்கள்.

Continue reading “மூலதனம் – சிறுகதை”