திருஞானசம்பந்தர் நாயனார் தம்முடைய பதிகங்களின் மூலம் தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர். உமையம்மை இவருக்கு சிவஞானம் கலந்த ஞானப்பாலை ஊட்டியதால் மூன்று வயதிலேயே இறைவனைப் போற்றிப் பதிகம் பாடும் திறனைப் பெற்றவர்.
பதிகம் என்பது இறைவனைப் போற்றும் முதல் பத்து பாடல்களையும், அப்பாடல்களால் உண்டாகும் நன்மைகளை விளக்கும் இறுதிப் பாட்டையும் கொண்ட தொகுப்பு ஆகும்.
திருஞானசம்பந்தர் நாயனார் சைவ சமயக் குரவர்களில் முதன்மையானவராகவும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் சைவ சமயக் குரவர்களில் ஏனையோர் ஆவர்.
Continue reading “திருஞானசம்பந்தர் நாயனார் – தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர்”