குட்டி யானை அப்பு

குட்டி யானை அப்பு

பசுஞ்சோலை என்றொரு அழகிய காடு இருந்தது. அக்காட்டில் குட்டி யானை அப்பு ஒன்று இருந்தது. அது மிகவும் சந்தோசமாக ஆடிப் பாடி காட்டில் திரிந்தது.

அக்காட்டில் உள்ள எல்லா விலங்குகள் மற்றும் பறவைகள் குட்டி யானை அப்புவை நேசித்தன. இது நரிக்குட்டி நஞ்சப்பனுக்கு பிடிக்கவில்லை. Continue reading “குட்டி யானை அப்பு”

தாயை மறந்தது ஏனோ?

தாயை மறந்தது ஏனோ?

கோயில் வாசலில் கேட்ட

வித வித பிச்சை ஒலிகள்

நெஞ்சை கழற்றித் தூரப்போட்டன .

 

தோள் சுருங்கிய தாயின் குரல் உள்நுழைந்து

பின்புலப்   படமுடன்  கதை  விரிந்தது.

எச்சூழ்நிலை தள்ளியது அவளை? Continue reading “தாயை மறந்தது ஏனோ?”

உலவாக்கோட்டை அருளிய படலம்

உலவாக்கோட்டை அருளிய படலம்

உலவாக்கோட்டை அருளிய படலம், இறைவனான சொக்கநாதர் தன்னுடைய பக்தனான அடியார்க்கு நல்லான் என்பவனுக்காக அள்ள அள்ளக் குறையாத உலவாக்கோட்டை என்னும் தானியக் களஞ்சியத்தை  அருளியதைக் கூறுகிறது. Continue reading “உலவாக்கோட்டை அருளிய படலம்”

வாழ்க்கை நெறிகள்

மகிழ்ச்சி

இன்றைய வாழ்வில் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படும் வாழ்க்கை நெறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கை எது வரை?

வாழ்வென்பது உயிர்  உள்ளவரை மட்டுமே. ஆதலால்  தேவைக்கு  செலவிடு.  அனுபவிக்க தகுந்தன அனுபவி.  இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தைக் கடைபிடி. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.  போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை.  ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.  உயிர் பிரியும் வரை தான் வாழ்வு; ஒரு நாள் கட்டாயம் அது பிரியும்.  அப்போது சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

பின்பற்ற வேண்டியவை 

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு.  

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே. 

உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. அவ்வப்போது பரிசுகள் அளி. குழந்தைகளிட‌ம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே. 

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும், 

பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, 
உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.

அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.  உன் சொத்தைத் தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக் கொள்ளலாம், பொறுத்து கொள்.  அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை, அன்பை அறியார். 

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள். ஆதலால்  இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு. ஆனால், நிலைமையை அறிந்து அளவோடு கொடு.  

எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே.  எல்லாமே இறந்த பிறகு என, உயில் எழுதி வைத்திராதே!  நீ, எப்போது இறப்பாய் என எதிர்பார்த்து காத்திருப்பர்.  எனவே கொடுப்பதை கொடுத்து விடு, பிறகு தரவேண்டியதைப் பிறகு கொடு.

வாழ்க்கை வாழ்வதற்கே

மாற்ற முடியாததை மாற்ற முனையாதே.

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே. 

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.  பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.  

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி  இறை பக்தி கொண்டு குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்.   இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள் சுலபமாக ஓடிவிடும். 
 வாழ்வை கண்டு களி!

ரசனையோடு வாழ்! வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்வில் செய்ய வேண்டியவை

மடையன்,  சுயநலக்காரன், முட்டாள்,  ஓய்வாக இருப்பவன் ஆகிய நான்கு நபர்களை புறக்கணி.பொய்யன்,  துரோகி,  பொறாமைக்காரன்,  மமதை பிடித்தவன் ஆகிய நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே.

அனாதை,  ஏழை,  முதியவர்,  நோயாளி ஆகிய நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே.

மனைவி,  பிள்ளைகள்,  குடும்பம்,  சேவகன் ஆகிய நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே.பொறுமை,  சாந்த குணம்,  அறிவு,  அன்பு ஆகிய நான்கு விசயங்களை ஆபரணமாக அணி.

தாய்,  தந்தை, சகோதரன், சகோதரி ஆகிய  நான்கு நபர்களை வெறுக்காதே.

உணவு,  தூக்கம்,  சோம்பல்,  பேச்சு ஆகிய  நான்கு விசயங்களை குறை.

துக்கம்,  கவலை, இயலாமை, கஞ்சத்தனம் ஆகிய  நான்கு விசயங்களை தூக்கிப்போடு.

மனத்தூய்மை உள்ளவன், வாக்கை நிறைவேற்றுபவன்,  கண்ணியமானவன், உண்மையாளன் ஆகிய  நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு.

தியானம், நூல் வாசிப்பு, உடற்பயிற்சி,  சேவை செய்தல் ஆகிய  நான்கு விசயங்கள் செய்.

வாழ்க்கை நெறிகள் பற்றி அறிந்து செயல்பட்டால்,  என்றும் நம் வாழ்க்கை இனிது. 

கோதுமை – மனிதனுக்கான தாவரப் புரதம்

கோதுமை

கோதுமை இன்றைக்கு உலக மக்களின் முக்கிய உணவுப் பொருளாகும். இது உலகில் அதிகம் பயிர் செய்யப்படும் பயிர்களில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. Continue reading “கோதுமை – மனிதனுக்கான தாவரப் புரதம்”