இன்னா செய்தாரை ஒறுத்தல் – கதை

அன்று காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போதே அன்றைய ஆங்கில வகுப்பை நினைத்து ரகுவுக்கு பயம் காரணமாக வயிற்றில் புளியைக் கரைத்தது.

‘கோடை விடுமுறையைக் கழித்த விதம்’ பற்றி மாணவர்களைக் கட்டுரை எழுதி சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தார் ஆங்கில ஆசிரியர். வகுப்பில் கண்டிப்பாக கட்டுரையைப் பற்றிக் கேட்பார்.

ரகுவுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வம் படிப்பில் இல்லை. ஆங்கில ஆசிரியர் கூறியிருந்ததை சுத்தமாக மறந்து விட்டிருந்தான்.

Continue reading “இன்னா செய்தாரை ஒறுத்தல் – கதை”

க(ச)லப்புத் திருமணம் – கதை

முற்போக்குச் சிந்தனையாளரான நல்லசிவத்தைத் தேடி அன்று காலை இருவர் வந்து, அவர் மகள் திருமண விஷயமாக ஓர் வரன் குறித்துப் பேச முற்பட்டபோது கறாராகச் சொல்லிவிட்டார்.

Continue reading “க(ச)லப்புத் திருமணம் – கதை”

ஈடுபாடு – கதை

நவக்கிரகத்தை வலம் வந்த சமயம் கோயிலை ஒட்டிய புல்தரையில் அமர்ந்து அந்த இரு பெண்மணிகளும் உரையாடிக் கொண்டிருந்தனர். இருவருமே சம வயதுக்காரர்கள்; ஐம்பதைத் தாண்டியவர்கள்.

Continue reading “ஈடுபாடு – கதை”

நினைவுகள்… நிஜங்கள்…. கற்பனைகள்….. – கதை

சுதாகருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அலுவலகத்தில் அவரவர் மிகத்தீவிரமாகத் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க, இவன் மட்டும் எதுவுமே செய்யத் தோன்றாதவனாக மேஜை டிராயரை இழுப்பதும், மூடுவதும், போனை நோண்டுவதும், டேபிள் வெயிட்டை உருட்டுவதுமாய், ஃபைல்களைத் திறந்து மூடி இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான்.

சுதாகருக்கு நேர் எதிர் இருக்கைக் காலியாக இருந்தது. அதில் மோகனா அமர்ந்திருப்பதாகவே தோன்றியது அவனுக்கு. அவளது உருவத்தை மனதிலிருந்து அகற்ற முடியவில்லை.

Continue reading “நினைவுகள்… நிஜங்கள்…. கற்பனைகள்….. – கதை”