கண்ணின் கருவிழி பேசும் – உன்
காதலில் புதுமணம் வீசும் – அடி
சின்னஞ்சிறு நடைகொண்டு
அன்னத்தின் சாயலில்
வாடி – இன்பம் தாடி!
போதை விதானங்களுக்குள்… – கவிஞர் கவியரசன்
எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்
என்பதெல்லாம் தெரியாமல்
எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம்
வகுத்ததிலிருந்து வழி மாறிய
அறியாத பயணங்களில்
வலுவிழந்து வாழ்வியலை
சூனியமாக்கும் விதமாகவே
யாவரும் இங்கு…
வருடியது வசப்படும் வரை… – கவிஞர் கவியரசன்
வருடலின் சுகமறிந்த சிறு மனம்
வருடியதை வசப்படுத்திக் கொள்ள
வலை விரித்து காத்துக் கிடக்கிறது
வருடியது வசப்படும் வரை
வற்றியபடி!
பிளிறும் களிறு! – கவிஞர் கவியரசன்
பிழைத்துக் கொள்வோமா மாட்டோமாவென
திக்கெட்டும் திடுமென அதிர்ந்தது காடு
பிளிறும் களிறால்!
தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்
அருள்வேண்டி உனைப்பாடி
அழுகின்ற தல்லாமல்
பொருள்வேண்டி மனம் நாடுமா – நிதம்
புழுவாகி தடுமாறுமா
இருள்தாண்டும் ஒளியேயென்
இடர்தாண்டும் வழியேஉன்
இயக்கத்தை வான்மீறுமா – நீ
இமைக்காமல் காற்றாடுமா!