நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 8 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

கட்டிலில் கண்களை மூடிப்படுத்திருந்தாள் இந்து. வலதுகால் கணுக்காலிலிருந்து பாதத்தை மூடிக் கட்டுப் போடப்பட்டிருந்தது.

அருகே மர நாற்காலி ஒன்றில் விசனத்தோடு அமர்ந்திருந்தார் ரத்தினவேல்.

“இந்து, இந்தும்மா! ரொம்ப வலிக்குதாடா கண்ணு.”

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 8 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 7 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

சேற்றில் வழுக்கி விழுந்த இந்து எழுந்திருக்க முயன்று தோற்றுப் போனாள். செருப்பு சேற்றில் மாட்டிக் கொண்டிருந்தன. கால்களை விடுவிக்க முயன்றபோது வலது கணுக்கால் ‘விண்விண்’னென்று வலிக்க ஆரம்பித்தது. மீண்டும் கைகளை ஊன்றி எழ முயன்றபோது, அருகிலிருந்த பூவரசு மரத்தடியில் வந்து நின்றான் ராகவ்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 7 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 6 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்?- அத்தியாயம் 6

ஆறி சில்லிட்டுப் போன வெந்நீரை நான்கு விரல்களால் தொட்டுத் தொட்டுப் பார்த்தாள் இந்து. வேறு வழியில்லை ஊற்றிக் குளித்துதான் ஆகவேண்டும்.

கண்களை மூடிக்கொண்டு பற்களைக் கடித்துக்கொண்டு சட்டென ஒருசொம்பு ஜில்லிட்ட நீரை மொண்டு மேலே ஊற்றிக் கொண்டாள். முதலில் வெடவெடத்தது. மொண்டு மொண்டு ஊற்றிக் கொள்ள குளிர் விட்டுப்போனது.

“அம்மா! நா கிடுகிடுன்னு ரெடியாகி வந்துடறேன். சாப்பாடு எடுத்து வையி. லேட்டானா எட்டு அம்பது பஸ் போயிடும்” சமயலறையில் இருந்த தாயின் காதுகளில் விழும் அளவுக்குச் சப்தமாய்க் கத்தியபடி தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் இந்து.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 6 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 5 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

“ஏய்! இந்து! எந்திரி, எந்திரி மணி ஏழாவுது பாரு. இன்னிக்கி திங்கக்கெழம. காலேஜி உண்டில்ல. லேட்டா எழுந்தீன்னா அப்பறம் பஸ்ஸுக்கு லேட்டாயிட்டுன்னு பரவா பரப்ப. வெறும் வயத்தோட ஓடுவ. ம்..ம்..எந்திரி எந்திரி..” அம்மா சுந்தரி தோளைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் கண் விழித்தாள் இந்து.

“அம்மா! அப்பா?”

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 5 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”