செங்கல் ‍- சிறுகதை

செங்கல் ‍- சிறுகதை

ஐந்தாயிரம் சதுரடியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் ஒரு தளத்தில் நான்கு மணி நேரமாக கரண்ட் இல்லாமல் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.

நூற்றி ஐம்பதிற்குக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேப்பரால் விசிறிக் கொண்டும், திறக்க முடியாத கண்ணாடி ஜன்னல்களை திறக்க முயற்சித்தும் புழுங்கி தவிக்கிறார்கள்.

ஐம்பது கோடி ரூபாய் ப்ராஜெக்ட். ஏற்கனவே இந்த ப்ராஜெக்ட் தாமதமாகி விட்டது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.

மும்பையிலிருக்கும் கம்பெனிச் சேர்மன் நிமிடத்திற்கு ஒருமுறை போன் செய்கிறார்.

Continue reading “செங்கல் ‍- சிறுகதை”

நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்- ‍நூல் மதிப்புரை

நார்த்தாமலை சிவன் கோவில்களின் அற்புதங்கள்- ‍நூல் மதிப்புரை

‘நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்’ எனும் தலைப்பில் பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதியுள்ள இந்தப் புத்தகம் ஒரு வரலாற்றுப் பெட்டகமாக மின்னுகிறது.

கோயில்கள் பற்றிய தெளிவற்ற, ஆன்மீகத்தில் இன்னும் அரிச்சுவடி நிலையிலே இருக்கும் என்னைப் போன்றவர்கள் கூட, உடனடியாக நூலுடன் ஒன்றிப் போகும் அளவிற்கு இந்தப் புத்தகம் சிறப்பாக‌ எழுதப்பட்டுள்ளது.

ஆன்மீக நூல் மட்டுமல்ல‌

நான் வாசிக்கும் முதல் ஆன்மீகப் புத்தகமிது. கண்டதும் காதல் போல், இந்தப் புத்தகத்தின் காதலனாகவே மாறிவிட்டேன். ஆசிரியரின் மற்ற புத்தகங்களை மாற்றி வைத்துவிட்டேன்.

எனக்குக் கடவுள் நம்பிக்கையை விட, கடவுள் தேடுதலை விட, கோயில்கள் பற்றிய பிரமிப்பு இன்னமும் நெஞ்சை விட்டு நீங்காமல் இருந்து வருகிறது.

குறிப்பாகத் தஞ்சையில் பெரிய கோயிலைப் பார்த்த பின்பு, என்னுள்ளே ஏகப்பட்ட கேள்விகள்; குழப்பங்கள்.

எல்லாவற்றிற்கும் பாரதிசந்திரன் இந்த நூலில் பதிலாக, பாடமாக எழுதித் தந்துள்ளார்.

Continue reading “நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்- ‍நூல் மதிப்புரை”

காஜு கத்லி – சிறுகதை

காஜு கத்லி

அகல்யாவும் ஷர்மிலியும் கலைக் கல்லூரி ஒன்றின் கணினிப் பிரிவு பேராசிரியைகள்.

விழித்திருக்கும் 90 சதவிகித நேரத்தை பணி இடத்திலேயே செலவிடுபவர்களுக்கு, சக பணியாளர்களே சொந்தமாக உறவாக மாறிப் போகிறார்கள்.

அப்படிதான் அகல்யாவும் ஷர்மிலியும் நட்பாகி, உறவாகி, தங்கள் சுகம், துக்கம், மகிழ்ச்சி, குடும்பம், வேலை என எல்லா சங்கதிகளையும் பரிமாறிக்கொண்டு வாழ்பவர்கள்.

கல்லூரியில் பாடம் எடுப்பது மட்டும் வேலை இல்லை. அது சார்ந்த நிறைய பணிகள் இருந்து கொண்டே இருக்கும். அந்த பணிச்சுமை தீராத அழுத்தத்தை தந்து கொண்டே இருக்கும்.

Continue reading “காஜு கத்லி – சிறுகதை”

டெலி காலிங் – சிறுகதை

மகிழினி காலையில் குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று மயங்கி விழுந்தாள்.

கீழே விழும்போது எதிரே இருந்த மேஜையில் தலைமோதி, முன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

அப்பா, அம்மா, தங்கை மூவரும் அலறி அடித்து ஓடிவந்து தூக்கினார்கள். மகிழினி பேச்சு மூச்சற்று கிடந்தாள்.

அக்கம் பக்க மனிதர்கள் எல்லாம் கூடி ஆம்புலன்ஸில் ஏற்றி, அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள்.

“அய்யோ, மகமாயி தாயீ, எம்புள்ளைக்கு என்னாச்சு? இந்த சின்ன வயசுலேயே உழைச்சு குடும்பத்தை காப்பாத்திற‌ என் தங்கத்துக்கு என்னாச்சு?” என தேம்பி தேம்பி அழுத மகிழின் அம்மா கனகத்தை சின்ன மகள் யாழினி தாங்கி பிடித்து கொண்டிருந்தாள்.

Continue reading “டெலி காலிங் – சிறுகதை”

ஓலா – சிறுகதை

ஓலா - சிறுகதை

பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு அதிகாலை திருமணம்.

சென்னையிலிருந்து எப்படியாவது போயே ஆகவேண்டும், இல்லையேல் சுனாமி வந்து விடும். ஏற்கனவே எங்கள் உறவு என்கிற ஓஸோனில் ஓட்டை விழுந்து கிடக்கிறது .

அலுவலகத்தில் ஒரு நாள் விடுப்பு கேட்டால் பூகம்பம் வெடிக்கும். நான் இல்லையென்றால் அலுவலகமே ஸ்தம்பித்து விடும் என்கிறார்கள்.

மனைவியை மட்டும் அனுப்பி வைக்கலாம் என்றால், கொரோனாவால் பஸ் போக்குவரத்தும் இல்லை.

“ஓலா அவுட் ஸ்டேஷன் டாக்ஸி புக் செய்து தருகிறேன். நீ மட்டும் போய் வா.” என்று சொன்னதனால் ஏற்பட்ட சண்டை, சீன எல்லையான கள்வான் பள்ளத்தாக்கில் நடந்ததை விட மோசமாக இருந்தது.

“அதிகாலை 3 மணிக்கு யாருன்னே தெரியாத ஓலா டிரைவரை நம்பி என்னை அனுப்பி வைக்க நினைக்கிறீங்களே. நாட்டு நடப்பு எதாவது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?” என்று அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் டாப் கிளாஸ். தலைமை நீதிபதியே இவ கிட்ட நிறைய கத்துக்கனும்.

Continue reading “ஓலா – சிறுகதை”