கலிய நாயனார் தான் செய்துவந்த விளக்கெரிக்கும் தொண்டிற்கு தேவையான எண்ணெய் வாங்க இயலாததால் தம்முடைய உதிரத்தால் விளக்கு எரிக்க முற்பட்ட வணிகர்.
பண்டைய தொண்டை நாட்டில் இருந்த சிறந்த தலங்களுள் ஒன்று திருவொற்றியூர். கடலின் அருகே அமைந்த இந்த நெய்தல் நிலத் திருத்தலத்தில் உதித்தவர் கலியனார்.
பிறப்பிலேயே செல்வந்தரான அவர் தம்முடைய குலத்தொழிலான எண்ணெய் ஆட்டி விற்கும் வியாபாரத்தில் சிறந்து விளங்கி பெரும் செல்வந்தராக விளங்கினார்.
(மேலும்…)