கனவு மெய்ப்பட – சிறுகதை

கனவு மெய்ப்பட - சிறுகதை

தார் சாலையில் இருந்து மண் ரோட்டில் இறங்கியது சைக்கிள்.

வழிநெடுகிலும் வயல்வெளிகள் சாலையோரத்தில் பனைமரங்களும் கருவேல மரங்களும் நிறைந்த பகுதியாக இருந்தது.

சுற்றிலும் பார்வையை செலுத்தியவாறு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் ஒருவர். அவருக்கு 55 வயது இருக்கும்.

பட்டு வேட்டி சட்டையுடன். வாயில் வெத்தலை பாக்கு மென்று கொண்டு மூக்குக் கண்ணாடி அணிந்தவாறு கையில் ஒரு பேக் உடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

Continue reading “கனவு மெய்ப்பட – சிறுகதை”

எப்போதும் கேட்கும் இன்னிசையே!

எப்போதும் கேட்கும் இன்னிசையே

மொட்டைப்பாறை மொக்கையன்தான்
மொழு மொழுவென்று வளர்ந்தவன்தான்
வெட்ட வெளியில் நிற்பவன்தான்
விண்ணைத் தொட்டிட நினைப்பவன்தான்

Continue reading “எப்போதும் கேட்கும் இன்னிசையே!”

செந்திலும் நானும் – சிறுகதை

செந்திலும் நானும் - சிறுகதை

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும் என்கிற இயற்பியல் கோட்பாட்டின்படி தான் எனக்கும் செந்திலுக்குமான பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது.

எனக்கு பேச்சே பிரதானம், செந்திலுக்கு மௌனமே மூலதனம்.

கடவுள், காதல், கவிதை, இலக்கியம், சினிமா என்று எல்லாமே எனக்கும் செந்திலுக்கும் நேர் எதிர் ரசனைகள்; வாழ்வியல் நடை முறைகள்.

Continue reading “செந்திலும் நானும் – சிறுகதை”

வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

நாங்க பத்து பேரும் கம்மல் வாங்கியது பெரிய சந்தோசமா இருந்துச்சு. கனிக்கு தேர்க்கம்மல் வாங்க நான் கொடுத்த இரண்டு பைசாவ அவ எனக்கு திருப்பிக் கொடுத்தா.

இப்ப என்கிட்ட மொத்தம் ஐந்து பைசா மீதி இருந்தது.

‘காசு வச்சிருக்கவுக வளையல் வேண்னா, வாங்கிக்கலாம்’ன்னு சொர்ணம் சொன்னா.

Continue reading “வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”

நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை

குட்டித் தவளை - சிறுவர் கதை

சோலையூரில் அழகிய குளம் ஒன்று இருந்தது. அக்குளம் நீரால் நிரம்பி வழிந்தது. அக்குளத்தில் தாமரை, அல்லி, குவளை போன்ற தாவரங்கள் காணப்பட்டன.

செந்தாமரை வெண்தாமரை மற்றும் குவளை மலர்களால் பகலிலும், செவ்வல்லி மற்றும் வெள்ளல்லி மலர்களால் இரவிலும் மிகவும் அழகாகக் குளம் காட்சியளித்தது.

அக்குளத்தில் அயிரை, கெண்டை, விரால், தங்கமீன் போன்ற மீன் வகைகளும், தவளைகளும் சந்தோசமாகச் சுற்றித் திரிந்தன.

அக்குளத்தில் சங்கு என்ற குட்டித் தவளை ஒன்று வசித்தது. அது மிகவும் அன்பானது. எல்லோரிடமும் மிகவும் நட்புடன் பழகும்.

Continue reading “நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை”