போராடும் துணிவிருந்தால்
போர்க்களமும் வெறும் களம் தான்!
புத்தி தீட்டாத மனிதனில்
வெறும் நிகழ்வும் போர்க்களம் தான்!
நிலைமை மாறுமே! – தா.வ.சாரதி
வெற்றி தோல்வி யாவும்
நமது கையிலே!
முயற்சி செய்து பார்த்தால்
கிடைக்கும் நன்மையே!
நர்மதா ஒரு நீரோடை – கதை
மாலை மணி நாலே முக்கால்.
துருப்பிடித்த குழாய்களோடு நைந்துபோன பவானி ஜமுக்காளத்தாலான சிகப்பும் வெள்ளையுமாய் கோடுபோட்ட துணி மாட்டப்பட்டிருந்த ஹைதர்காலத்து ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி செகண்ஹேண்டில் பெரும் பிரயத்தனத்தில் வாங்கிய சின்ன சைஸ் டிவியில் நியூஸ்சேனலில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுராமன்.
“ஏன்னா..நியூஸே பாத்துண்ருக்கேள்.. சங்கரா டிவி மாத்தமாட்டேளா..”
“மணி நாலே முக்கால் தானே ஆறுது நர்மதா.. அஞ்சு மணிக்குதானே லலிதா சகஸ்ரநாமம் சங்கரா டிவில..”
“இல்ல..இல்ல..நாலு அம்பதாறுக்கே ஆரம்பிச்சுடறுது..மணி நாலு அம்பத்தஞ்சு ஆயிடுத்து பாருங்கோ..”
Continue reading “நர்மதா ஒரு நீரோடை – கதை”வாழ்க்கை!
ஓடிக் கொண்டே இருக்கும் வரை
நதி தன் பெருமையை இழப்பதில்லை
பாடிக் கொண்டு இருக்கும் வரை
புல்லாங்குழல் தன் புகழை இழப்பதில்லை
சுகமான சுமை – கதை
செழியனுக்கு அன்று காலைப் பொழுது சீக்கிரமே புலர தொடங்கியது.
சுற்றுலா தளத்தின் அருகே இருப்பதனாலோ என்னவோ அன்று காலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. தன் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வெளியே கிளம்பினார் செழியன்.
Continue reading “சுகமான சுமை – கதை”