எழுத்தாளர் பாரதிசந்திரன் நூலுக்கு விருது

எழுத்தாளர் பாரதிசந்திரன்

எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதிய ‘படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்‘ எனும் நூல், பொதிகை மின்னல் கலைக்கூடம் வழங்கும் சிறந்த கட்டுரை நூல் விருது பெற்றது.

விருது பெற்ற எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்களை இனிது வாழ்த்துகிறது.

Continue reading “எழுத்தாளர் பாரதிசந்திரன் நூலுக்கு விருது”

உள்பரிமாணங்கள் – நூல் அறிமுகம்

உள்பரிமாணங்கள் என்னும் நூல் சிறந்த கொங்கணி மொழிச் சிறுகதைகளின் தொகுப்பு. ‘அந்தர் ஆயாமி‘ என்பது மூல நூலின் பெயர். இந்த கொங்கணிச் சிறுகதை நூல் 1994ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற‌து.

இதன் ஆசிரியர் கோகுல்தாஸ் பிரபு, ஒரு சிறந்த கொங்கணி மொழி எழுத்தாளர். கோபிநாத் ஹெக்டே இதனைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமி இந்நூலை வெளியிட்டுள்ளது.

உள்பரிமாணங்கள் என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் ஆசிரியர், இக்கட்டான நிலைகளில் மக்களின் எண்ணங்களைப் பற்றி எழுதியுள்ளார்.

Continue reading “உள்பரிமாணங்கள் – நூல் அறிமுகம்”

படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் – புத்தக மதிப்புரை

படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் - புத்தக மதிப்புரை

படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் புத்தகத்தை படிக்க நான் நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டேன்.

ஒரே மூச்சில் படித்து முடிக்க, இது ஒரு நாவலோ வரலாற்றுக் கதையோ காதல் கவிதைகளோ அல்ல.

எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதிய இந்த நூலில் பல்வேறு திசைகளில் இருந்தும் திரட்டப்பட்ட பல்வேறு அறிவார்ந்த விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

24 தலைப்புகளில், 24 கோணங்களில், 24 வெவ்வேறு தளங்களில் அதே சமயம் ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத, ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தகவல் திரட்டாக இந்தப் புத்தகம் எனக்கு ஒரு புதிய பரிணாமத்தைத் தந்துள்ளது.

Continue reading “படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் – புத்தக மதிப்புரை”

நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்- ‍நூல் மதிப்புரை

நார்த்தாமலை சிவன் கோவில்களின் அற்புதங்கள்- ‍நூல் மதிப்புரை

‘நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்’ எனும் தலைப்பில் பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதியுள்ள இந்தப் புத்தகம் ஒரு வரலாற்றுப் பெட்டகமாக மின்னுகிறது.

கோயில்கள் பற்றிய தெளிவற்ற, ஆன்மீகத்தில் இன்னும் அரிச்சுவடி நிலையிலே இருக்கும் என்னைப் போன்றவர்கள் கூட, உடனடியாக நூலுடன் ஒன்றிப் போகும் அளவிற்கு இந்தப் புத்தகம் சிறப்பாக‌ எழுதப்பட்டுள்ளது.

ஆன்மீக நூல் மட்டுமல்ல‌

நான் வாசிக்கும் முதல் ஆன்மீகப் புத்தகமிது. கண்டதும் காதல் போல், இந்தப் புத்தகத்தின் காதலனாகவே மாறிவிட்டேன். ஆசிரியரின் மற்ற புத்தகங்களை மாற்றி வைத்துவிட்டேன்.

எனக்குக் கடவுள் நம்பிக்கையை விட, கடவுள் தேடுதலை விட, கோயில்கள் பற்றிய பிரமிப்பு இன்னமும் நெஞ்சை விட்டு நீங்காமல் இருந்து வருகிறது.

குறிப்பாகத் தஞ்சையில் பெரிய கோயிலைப் பார்த்த பின்பு, என்னுள்ளே ஏகப்பட்ட கேள்விகள்; குழப்பங்கள்.

எல்லாவற்றிற்கும் பாரதிசந்திரன் இந்த நூலில் பதிலாக, பாடமாக எழுதித் தந்துள்ளார்.

Continue reading “நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்- ‍நூல் மதிப்புரை”

நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் என்ற‌ நூல் திரு.சி. இராமமூர்த்தி இராமாநுஜதாசன் அவர்களால் மே மாதம்-2021 ல் வெளியிடப்பட்ட அற்புதமான நூல் ஆகும்.

அற்புதமான ஆழ்வாரான நம்மாழ்வாரின் இலக்கிய நயங்களையும், வைணவச் சமயம் சார்ந்த இறையாண்மைக் கருத்துக்களையும் பன்னூல் புலமையோடு ஒப்பிட்டும், உவமித்தும் எழுதப்பட்டது இந்நூல்.

ஆன்மீகம் ஒரு மாபெரும் பிரமாண்டம். அதை இன்னும் யாரும் முழுதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதில் நுழைவதற்கான பல வழிகளில் இந்த நூலும் ஒன்று எனலாம்.

Continue reading “நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை”