தலைவலியை குணமாக்கும் இஞ்சி – ஜானகி எஸ்.ராஜ்

இஞ்சி ஒரு லவங்கப் பொருள் மட்டுமின்றி, வேருடன் கூடிய காய்கறி வகையைச் சேர்ந்தது என்றும் கூறலாம். இஞ்சி பூமிக்கு அடியில் விளையக் கூடியது.

முதன்முதலாக இந்தியாவிலும், பிறகு சீனாவிலும் இஞ்சி பயிரிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இஞ்சியைப் பற்றிய மருத்துவக் குறிப்புகள் சமஸ்கிருத இலக்கியத்திலும் சீன மருத்துவக் கட்டுரைகளிலும் நிறையவே இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு நூறு கிராம் இஞ்சியிலும் புரதம் 80.9 சதவிகிதம், ஈரப்பதம் 23 சதவிகிதம், 0.9 சதவிகிதம் கொழுப்பு, 12 சதவிகிதம் தாதுச்சத்து, 2.4 சதவிகிதம் நார்ச்சத்து, 12.3 சதவிகிதம் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளன.

மேலும் 20 மில்லிகிராம் சதவிகிம் கால்சியம், பாஸ்பரஸ் 60 மில்லிகிராம் சதவிகிதமும், இரும்புச்சத்து 2.6 மில்லிகிராம் சதவிகிதம், கரோட்டீன் 40 மில்லிகிராம் சதவிகிதமும், தையாமின் 0.06 மில்லிகிராம் சதவிகிதம், ரிபோபிளாவின் 0.03 மில்லிகிராம் சதவிகிதம், நியாசின் 0.6 மில்லிகிராம் சதவிகிதம், வைட்டமின் சி 6 மில்லிகிராம் சதவிகிதம் ஆகியவைகளும் அடங்கியுள்ளன.

வேதகாலத்திலிருந்தே இஞ்சி, மருத்துவப் பொருளாக உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. இஞ்சியை உபயோகிப்பதால் வயிற்றுப்பகுதி பலப்படுத்தப்பட்டு நன்கு செயல்படுகிறது.

சாப்பிட்ட பிறகு, ஒரு சிறிய துண்டு இஞ்சியை வாயில்; போட்டு குதப்புவதின் மூலம் உடம்புவலி, வாந்தி போன்றவைகளைப் போக்கும் தன்மையுடையது.

இஞ்சி சாற்றுடன் சிறிது தேன் கலந்து தினமும் மூன்று அல்லது நான்கு தடவைகள் சாப்பிட, நாட்பட்ட இருமல் நிற்கும்.

மூச்சுக்குழாய் வீக்கம், ஆஸ்துமா, கக்குவான் இருமல், காசநோய் போன்றவைகளுக்கு இஞ்சி அருமருந்தாகத் திகழ்கிறது.

கன்னங்களிலும் முகத்திலும் தடவிக் கொண்டால் பல்வலி குணமாகும். காதுவலிக்கு, இஞ்சிச் சாற்றின் துளிகள் காதிற்குள் விட்டுக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சியை நாம் அவ்வப்போது உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வோமாக.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.