சொர்க்க வனம் 6 – வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு

வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு

குருவிகள் எல்லாம் வந்த வழியே மீண்டும் பயணித்துக் கொண்டிருந்தன.

சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின்பு மீண்டும் அந்த மனித குடியிருப்புகள் தென்பட்ட பகுதியினை வந்தடைந்தது குருவிக் கூட்டம்.

“அந்த ஏரி எங்காவது தென்படுகிறதா?” என இருன்டினிடே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. மற்ற குருவிகளும் அவ்வாறே ஏரியை தேடிக் கொண்டிருந்தன. Continue reading “சொர்க்க வனம் 6 – வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு”

சொர்க்க வனம் 5 – பயணத்தில் தடுமாற்றம்

பயணத்தில் தடுமாற்றம்பயணத்தில் தடுமாற்றம்

அது அகண்ட ஆறு. நீளமும் மிக அதிகம். அது, அருகிலிருந்த ஒரு மலை உச்சியில் பிறந்து, பள்ளத்தாக்கு வழியே பாய்ந்து பன்னெடுங்காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆற்றின் அக்கரையில் உயர்ந்த மரங்கள் எண்ணற்ற அளவில் இருந்தன. இக்கரையில் மணற்பரப்பு விரவி இருந்தது.

அதையடுத்த மேட்டுப் பகுதியில் புதர்ச் செடிகள் மண்டியிருந்தன. ஆங்காங்கே குட்டை மரங்களும் இருந்தன. Continue reading “சொர்க்க வனம் 5 – பயணத்தில் தடுமாற்றம்”

உலகின் பசுமை நாடுகள் 2020

உலகின் பசுமை நாடுகள் 2020

உலகின் பசுமை நாடுகள் 2020 பட்டியலை யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழங்கள் இணைந்து ஆய்வு நடத்தி சமீபத்தில் வெளியிட்டுள்ளன.

இந்த ஆய்விற்கு 180 நாடுகளின் சுற்றுசூழல் மற்றும் அதனுடைய செயல்திறன் கணக்கில் கொள்ளப்பட்டன.

இப்பட்டியலில் முதல் பத்து இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இப்பட்டியலில் இந்தியா 169-வது இடத்தையும், ஐக்கிய அமெரிக்கா 24-வது இடத்தையும், சீனா 120-வது இடத்தையும், பாகிஸ்தான் 142-வது இடத்தையும் பிடித்துள்ளன.

Continue reading “உலகின் பசுமை நாடுகள் 2020”

சொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்

தாயகம் தாண்டிப் பயணம்

பயணம் துவங்கி ஆறாவது நாள்.

மாலை நேரத்தில் அந்த மரத்திலிருந்து புறப்பட்ட குருவிக் கூட்டம் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தது.

குருவிகள் எல்லாம் உற்சாகமாய் இருந்தன.

ஒரு குருவி பாடல்களை பாடியது. அப்பாடல்கள் நீதியினை போதிக்கும் வகையில் இருந்தன. இனிமையான குரலில், நற்கருத்துகளையும் கேட்டு குருவிகள் எல்லாம் மகிழ்ந்தன. Continue reading “சொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்”

சொர்க்க வனம் 3 – பயணத்தில் திடீர் தடங்கல்

பயணத்தில் திடீர் தடங்கல்

மலை உச்சியிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரம் ஆயிற்று. இன்னும் அவற்றின் தாயகமான வடதுருவப் பகுதி எல்லையில்தான் அக்குருவிக் கூட்டம் பறந்து கொண்டிருந்தது.

மழை இல்லை. மழை மேகங்கள் இல்லை. நீல வானம் பளிச்சிட்டது. மங்கிய சூரிய ஒளிக்கதிர்கள் சூரியன் அஸ்தமனமாகப் போவதை உணர்த்தின. Continue reading “சொர்க்க வனம் 3 – பயணத்தில் திடீர் தடங்கல்”